states

குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் மனித குலத்திற்கே அவமானம்!

சென்னை, ஏப். 12- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமான சின்னம்  என்று சட்டப்பேரவையில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி 5 வயது சிறு மியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் புத னன்று (ஏப். 12) கேள்வி நேரம் முடிந்த தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு மு.க. ஸ்டாலின் விளக்கம்  அளித்து கூறியதாவது: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சக்தி நகரில் இயங்கி வரும் தனியார் தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் 6 வயது சிறுமி 11ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற  உடன் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு தனியார் மருத்துவ மனையில் பரிசோதனை செய்தபோது, அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பள்ளி யின் தாளாளர் பக்கிரிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு பார பட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப் பட்ட பக்கிரிசாமி, விருத்தாசலம் நகராட்சி 30ஆவது வார்டு உறுப்பின ராக உள்ளார் என்பதை அறிந்த உடன், அவர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். இந்த அரசை பொறுத்த வரை, நான் செய்தியை கேள்விபடவில்லை, தொலைக்காட்சியில் தான் பார்த்தேன்  என்று கூற நான் தயாராக இல்லை.  இந்த செய்தி அறிந்த உடன் உடன டியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மனித குலத்திற்கே ஒரு அவமானச் சின்னம் என்று கருது கிறோம். எனவே இதுபோல் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமின்றி துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.