states

வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர்கள் உண்ணாவிரதம்

 மதுரை, மே.17-  வேளாண்மைத்துறை மற்றும் அதனை சார்ந்த சகோதரத்துறை களில் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை போன்ற பணிகள் செய்வ தற்கு குறைந்தபட்ச அமைச்சுப் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும். தொழில்நுட்பத்துறையில் அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழு மையாக கொண்டு சேர்க்க , நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகப் பணி களை செய்திட குறைந்தபட்ச அமைச்சுப் பணியிடங்களை தேவைக் கேற்ப பூர்த்தி செய்திட நிதி மேலாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில்  தமிழக நிதித்துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில்  மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் மே 17 செவ்வாய்க்கிழமையன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இரா.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர்  மு. சௌந்தரராஜன்  துவக்கி வைத்து பேசினார்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கி. முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சா .  கோதண்டபாணி சிறப்புரையாற்றினார்.அரசு ஊழியர் சங்க மாநில  பொதுச் செயலாளர் ஆ. செல்வம் நிறைவுரையாற்றினார். தோழமை  சங்க நிர்வாகிகள் ஆதரித்துப் பேசினர்.  மதுரை மாவட்ட தலைவர் ஹ.ஹபீப் முத்து மற்றும்  மாநில செயலாளர், துணைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.  மாநில பொருளாளர் இ . ரேணுகாதேவி  நன்றி கூறினார். மாவட்ட முழுமைக்கான நிர்வாகப் பணிகளை கவனிக்க புதிதாக  உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர்  அலுவலகங்களுக்கு பணியிடம் அனுமதிக்க வேண்டும். அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகக் கையாளுவதற்கு ஆட்சி அலுவலர் பணியிடம் அவசியம் என்பதால் , இதர அனைத்து மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலகங்களுக்கும், தலா ஒரு ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.