விழுப்புரம், ஜன.4- விருதுநகர் மாவட்டம் பொம்மையாபுரம் பட்டாசு விபத்தில் பலியான 6 தொழி லாளர்களுக்கு இரங்கல் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அப்பையநாயக்கன் பட்டி அருகேயுள்ள பொம் மையாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த சாய்நாத் தனியார் பட்டாசு ஆலை யில் இன்று (04.01.2025) காலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை யைத் துவங்கும் போது ஏற் பட்ட வெடிவிபத்தில் 6 தொழி லாளர்கள் உடல் சிதறி சம் பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். 2 பேர் காயம்பட்டு சிகிச் சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ஆறு தொழிலாளர்களுக்கு சிபிஐ(எம்) 24-ஆவது மாநில மாநாடு ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கி றது. உயிரிழந்த தொழிலா ளர்கள் குடும்பத்திற்கு தமி ழக அரசு இழப்பீடாக ரூபாய் நான்கு லட்சம் அறிவித்துள் ளது. பட்டாசு ஆலை நிர்வாகம் முறையாக விதிமுறைகளை பின்பற்றாததால் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வரு கின்றன. தமிழக அரசும் மத் திய வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறையும் விருது நகர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பட்டாசு ஆலை களில் உரிய பாதுகாப்பு விதி முறைகளை முறையாகப் பின்பற்றுவதை கண்கா ணிப்பு செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்துபோன தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் 10 லட்சம், தமிழக அரசு 20 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். காய மடைந்த தொழிலா ளர்களுக்கு உரிய சிகிச்சை, காயத்தின் தன்மைக்கு ஏற்ப வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் விபத்தில் உயிரிழந்த தொழி லாளர்களின் குடும்ப வாரிசு கள் இஎஸ்ஐ-பிஎப் (ESI, PF) மூலம் பென்சன் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண் டும். விபத்தில்லா பட்டாசு உற் பத்தி செய்ய தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ள டக்கிய முத்தரப்புக் குழு அமைத்து பட்டாசு ஆலை களை ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க இம்மாநாடு கேட் டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.