மாமேதை காரல் மார்க்சின் 140வது நினைவுதினத்தையொட்டி மார்ச் 14 செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. “மார்க்சிய வழியில் உறுதியுடன் பயணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனிதகுலத்தை விடுதலை செய்திடும் புரட்சிப் பயணத்தை முன்னெப்போதையும் விட உறுதியுடன் மேற்கொள்வோம்” என பல்லாயிரக்கணக்கான தோழர்கள் உறுதிமொழி ஏற்றனர். சென்னையில் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகரன், ஆர்.பத்ரி, இரா.சிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். (வலது) மதுரையில் தீக்கதிர் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள மாமேதை மார்க்ஸ் சிலைக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மதுரை மாநகராட்சி துணைமேயர் டி.நாகராஜன், மதிமுக தொழிற்சங்கத் தலைவர் மகபூப் ஜான், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், செய்தி ஆசிரியர் ப.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை மாநகரின் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் மார்க்ஸ் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.