சென்னை, ஏப். 12- ஆவடி மாநகராட்சி சிறப்புக் கூட்டம் திங்க ளன்று (ஏப். 11) மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. ஏழு மலை தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலு வலர் தமிழரசி வரவேற்றார். ஆவடி மாநகராட்சியில் சிறப்புக் கூட்டம் நடத்தி சொத்துவரி தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஜான் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கடுமையாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் வர லாறு காணாத விலை உயர்வில் சிக்கித் தவித்து வரு கிறார்கள். எனவே மேலும் மக்களுக்கு சுமையேற்றும் சொத்துவரி, காலிமனை வரி உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆணையர் சரஸ்வதி பேசுகையில், வரும் 13ஆம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்றும் புதிய வரி விதிப்பு ஜூன் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். முன்னதாக சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன் தலைமையில் ஆவடி மாநகராட்சி ஆணை யர் சரஸ்வதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.