states

img

சிங்காரவேலர் சிலை அவமதிப்பு பாஜகவினருக்கு சிபிஎம் கண்டனம்

கடலூர், நவ.21- கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் சிஐடியு மாவட்ட அலுவலக வளாகத்  தில் சிந்தனை சிற்பி சிங்கார வேலர் சிலை உள்ளது. சிங்காரவேலரின் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, சிஐடியு, மீன்பிடி தொழிலாளர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு வெகுஜன அமைப்பின் சார்பில் அவ ருடைய நினைவு நாள், பிறந்தநாள் அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். உலக மீனவர் தினம் திங்களன்று (நவ.21) கடைப்  பிடிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு சிஐடியு அலு வலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலரின் சிலைக்கு  மாலை அணிவிக்கிறோம் என்ற பெயரில் பாஜகவினர் அத்துமீறி நுழைந்து பாரத் மாதா கி ஜே என்று கோஷ மிட்டதுடன், அவருடைய நெற்றியில் சந்தனம் குங்கு மம் வைத்து அவமரியாதை செய்துள்ளனர். இது சிங்காரவேலரின் தத்துவத்திற்கும், அவரின் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகும். இந்த சம்பவத்தை கண்டித்தும் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.