சென்னை, மே 4- பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தாராளமாக நிதி உதவி அளித்திடுமாறு பொதுமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள் ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நமது அண்டை நாடான இலங்கை கடுமை யான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள் ளது. அத்தியாவசிய பொருட்களின் செங்குத் தான விலையேற்றம், அதிகரித்துள்ள பண வீக்கம் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி களால் இலங்கை மக்கள் பெரும் துயருற்று வாடிவருகின்றனர். கடந்த பல பத்தாண்டுகளாக இலங்கையில் மாறி மாறி பொறுப்பேற்கும் அரசு கள் ஒரு புறத்தில் நவீன தாராளமயக் கொள்கை களை அமலாக்கிக் கொண்டே மறுபுறத்தில், மக்க ளிடையே பிளவை உருவாக்கும் இனவாத, மத வெறி அரசியலையும் முன்னெடுத்து வந்தன. இதன் விளைவாக தமிழ் மற்றும் சிங்கள மக்க ளுக்கு இடையே முரண்பாடுகளாலும், மோதல் களாலும் நிகழ்ந்த கொடுமைகள் சொல்லி மாளாது. சிறுபான்மை மக்களுக்குள்ளேயும் மோதல் உருவாக்கப்பட்டு ஏரா
இலங்கை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நாசகர பொருளாதார கொள்கைகள் அந்நாட்டை திவால் நிலையில் தள்ளிவிட்டுள்ளது. இவை களோடு ஊழல், ஊதாரித்தனத்தில் மூழ்கியிருந்த ஆட்சியாளர்களை எதிர்த்து, இலங்கையில் உரு வாகியுள்ள கடுமையான பொருளாதார பின்ன டைவு மற்றும் உள்நாட்டு நெருக்கடியால் அனைத் துத்தரப்பு மக்களும் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு அரசுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வரு கின்றனர். ஆட்சி அதிகாரத்திலிருந்து கோத்த பய ராஜபக்சே குடும்பத்தை வெளியேற்றும் வரை ஓயமாட்டோம் என சூளுரைத்து களம் இறங்கியுள்ளனர். கடந்த காலங்களில் நிலவிய பகைமையு ணர்விலிருந்து மீண்டு அனைத்து தரப்பு மக்க ளும் பொருளாதார மீட்பிற்காக ஒன்று திரண்டு களத்தில் நிற்பது வரலாற்று திருப்பு முனையா கும். அடக்குமுறைகளை எதிர்த்து உறுதியாக போராடிவரும் இம்மக்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு நேசக் கரம் நீட்டுவது அவசர அவசியமானதாகும். நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் நிவாரணப் பொருட்க ளையும், நிதி உதவியினையும் வழங்குவதற்கு தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ள முயற்சி யினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்கிறது.
தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பதெனவும், மேலும் தமிழகத்தில் உள்ள கட்சி கிளைகள், உறுப்பி னர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள், உள் ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வர்க்க வெகுமக்கள் அமைப்புகளும் தங்களால் இயன்ற நிதியினை தாராளமாக வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு திரட்டப்படும் நிதி யினை மொத்தமாக சேர்த்து தமிழக முதல்வரி டம் நேரில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.