states

வாழ்க்கைக்குத் தேவை சத்தியமே; “சாதி” அல்ல!

மதுரை, நவ.25- வாழ்க்கைக்குத் தேவை சத்தியமும், நியாயமும், தர்ம மும் தானே தவிர “சாதி” அல்ல. நீங்கள் உண்மையைக் கூறுவதற்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம். பொய் பேசுவது தெரிந்தால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்து தங்களை சிறைக்கு அனுப்ப நேரிடும் என சுவாதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகி யோர் அடங்கிய அமர்வு அறிவுரை வழங்கியது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் முன் வியாழனன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள், 2011-2015-ஆம் ஆண்டு வரையி லான கல்லூரிக் காலங்களில் கோகுல்ராஜை தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாதி தெரியும் என்று  பதிலளித்தார். உண்மையைச் சொல்லுங்கள்: கோகுல்ராஜு டன் பேசுவீர்களா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு,  அதிகமாகப் பேசுவேன் என்று சுவாதி பதிலளித்தார். அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர் பாக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஒன்றைக் காட்சிப் படுத்தினர். அந்த வீடியோப் பதிவில் கோகுல்ராஜும், சுவாதி யும் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த  வீடியோப்பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்? என்று நீதிபதிகள் கேட்டனர். அது யாரென்று தனக்கு தெரிய வில்லை என்று சுவாதி கூறினார். அது யாரென்று சரியாக நினைவில்லையென்றும் தொடர்ந்து கூறினார். பின்னர் வீடியோ பதிவில் உள்ளது கோகுல்ராஜ் தான் என்பதை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து நீதிபதிகள், இந்தச் சம்பவம் நடந்து ஏழு வருடங்கள்தான் ஆகிறது, அந்தச் சம்பவம் நினைவில் இல்லையா என்றும், வீடியோவில் சல்வார் கமீஸ் அணிந்து வரும் பெண் யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்ப தற்காகத்தான் இத்தனைமுறை கேள்வி கேட்கிறோம் என்ற னர். அப்போது நீதிமன்றத்தில் சுவாதி கண்கலங்கி அழத்  தொடங்கிவிட்டார். அப்போது நீதிபதிகள், “நீங்கள் அழுதா லும் உங்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்கிறோம்” என்றனர். ஒரு கட்டத்தில் நீதிபதிகள் உங்கள் பெயர் சுவாதி தானா? உங்கள் தந்தை பெயர் சரிதானா? வீட்டு முகவரி சரிதானா எனக்கேட்டனர்? அதற்கு அனைத்தும் சரி என்றார். பின்னர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணை வாசித்த நீதிபதிகள்...?  அது தங்களுடையது தானா என சுவாதியிடம் கேள்வியெழுப்பினர். செல்போன் எண் தம்முடையது அல்ல என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்  செல்போன் எண் கேட்டு விண்ணப்பித்த படிவத்தில் உள்ள புகைப் படத்தைக் காட்டி நீங்கள் தானா? என்றனர். அது தாம் தான் என்பதை சுவாதி ஒப்புக்கொண்டார். புகைப்படத்தில் இருப்பது நீங்கள் என்கிறீர்கள். செல்போன் எண் உங்க ளுடையது அல்ல என்கிறீர்கள் என்றனர். தாங்கள் நடந்த உண்மையைக் கூற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி னர். இந்த வழக்கு நடைபெற்ற காலங்களில் யுவராஜைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அது பற்றி எதுவுமே தெரியாது என்றார். இந்த வழக்கில் தொடர்புடைய சித்ரா, நடேசன், கலைச்செல்வன் ஆகியோரைத் தெரியுமா? புகார் அளிக்கும் போது உடனிருந்தார்களா என நீதிபதிகள் கேட்டதற்கு அவர்களைத் தெரியவே தெரியாது என்றார்.

காவல்துறை அடையாள அணிவகுப்பின் போது அருண் என்பவரை அடையாளம் காட்டியுள்ளீர்கள். இவர் தான் அருணா? எனக் கேட்டதற்கு அவரை யார் என்றே தெரியாது என்றார். யார் என்றே தெரியாத ஒருவரை அணி வகுப்பில் எப்படி அடையாளம் காட்டினீர்கள். ஏதாவது இருவர் புகைப்படத்தைக் காட்டினால் ஒருவரை காட்டுவீர்களா?  என சுவாதியிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். கோகுல்ராஜையும் முதலில் தெரியாது என்றீர்கள், யுவ ராஜையும் தெரியாது என்கிறீர்கள். அருணையும் தெரியாது என்கிறீர்கள். கலைச்செல்வன், சித்ரா, நடேசன் ஆகியோரை யும் தெரியாது என்கிறீர்கள். சம்பவம் நடைபெற்ற 23.6.2015 அன்று என்ன நடந்தது என்றாவது தெரியுமா? எனக் கேள்வி யெழுப்பினர். இந்த வழக்கில் உங்களுக்கு அழுத்தம் கொடுத்தது குற்ற வாளிகளா? காவல்துறையா? என நீதிபதிகள் கேள்வியெ ழுப்பியதற்கு பதிலளித்த சுவாதி காவல்துறையினர் கூறிய தைச் செய்தேன் என்றார். கடைசியாக நீதிமன்றம் உங்களுக்கு ஒரு வாய்ப்ப ளிக்கிறது. அடுத்தமுறை வரும் போது யோசித்து வாருங் கள். பொய் கூறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப் பட்டு சிறைக்குச் செல்ல நேரிடும் என்றனர் நீதிபதிகள். தற்போது தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை தானா என நீதிபதிகள் கேட்டதற்கு அனைத்தும் உண்மை தான் என்றார். தொடர்ந்து கம்மிய குரலில் பேசிய சுவாதி, நான் என்ன தப்பு செய்தேன்... என்றார். அதற்கு நீதிபதிகள், நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை என்பதே தவறு தான். உங்களது புகைப்படத்தையே நீங்கள் இல்லை  என்கிறீர்கள். நீங்கள் பேசியது அனைத்தும் உண்மைதானா என்பதை உங்கள் குழந்தையிடம் கேளுங்கள். வாழ்க்கைக் குத் தேவை சத்தியம், நியாயம், தர்மம் மட்டுமே “சாதி”  அல்ல என்றனர். பின்னர் நடைபெற்ற வழக்கறிஞர் வாதத்தை தொடர்ந்து சுவாதியை வருகிற புதன்கிழமை ஆஜர்படுத்த நீதிபதி கள் உத்தரவிட்டனர்.