கொரோனா பரவல்: மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை,ஜூலை 1- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு ஆளானவர்கள் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். கல்வி நிலையங்களில் மாணவர்கள் அதிக அளவில் இருப்பதால் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாகவும் கட்டுப் பாடுகளை கடைபிடிக்கும் படியும் பொதுசுகாதாரத் துறை கல்வித்து றையை கேட்டுக் கொண்டது. இதையடுத்து கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. அதில் முக கவசம் அணிந்து வர வைப்பது, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவது, வெப்ப நிலையை பரிசோதிப்பது போன்ற கட்டுப்பாட்டு விதி முறைகளை உடனே அமல்படுத்தும் படி கேட்டுக்கொண்டனர். மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பள்ளி களுக்கு முககவசம் அணிந்தபடி மாணவ-மாணவிகள் வந்தனர். முககவசம் அணிய மறந்து வந்தவர்களுக்கு சில பள்ளிகளே வழங்கியது. உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே மாண வர்கள் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட் டார்கள்.
கலைக் கல்லூரிக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
சென்னை,ஜூலை 1- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இது தவிர தனியார் கலைக்கல்லூரிகளும் உள்ளன. கடந்த 22ஆம் தேதி முதல் விண்ணப் பித்து வருகிறார்கள். முன்பு போல் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கும் நடைமுறை இப்போது கிடையாது. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். வழக்கம் போல் இந்த ஆண்டும் கலைக்கல்லூரிகளில் சேருவ தற்கு அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள். குறிப்பாக போட்டித் தேர்வுகள் எழுதி வேலைவாய்ப்பை பெறுவதற்காக பி.காம் பாட பிரிவை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அரசு கல்லூரிகளை பொறுத்தவரை பொறி யியல் மாணவர் சேர்க்கையை போல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தனியார் கல்லூரிகளில் பி.காம்., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பாட பிரிவுகளுக்கு ஏராளமானவர்கள் மோதுகிறார்கள். இதை சாதகமாக்கி பி.காம் படிப்பில் சேர ரூ.5 லட்சம் வரை சில கல்லூரிகளில் நன்கொடையும் வசூலிக்கப்படுகிறது.
மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்
சென்னை,ஜுலை 1- சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட அமைப்பின் உறுப்பினர்களாக 15 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். அணையில் ஆய்வு மேற் கொள்வது, அணையின் பாதுகாப்பை உறுதி செய்வது, நீர் வருகை, வெளியேற்றத்தைக் கண்காணிப்பது உள்ளிட்டப்பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ள உள்ளது. அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசின் அணைப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மாநில அளவிலான அமைப்பு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வேலுமணி வழக்கு: விசாரிக்கத் தடையில்லை!
சென்னை,ஜுலை 1- அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் நடந்த முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். இதற்கு தடை விதிக்க வேலுமணி தரப்பில் கோரியபோது விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.