நாகர்கோவில், ஜுலை 14- கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. வியாழனன்று காலை முதலே வானம் இருண்டு காணப் பட்டது. அதிகாலையிலும் சாரல் மழை நீடித்தது. நாகர்கோவில் பகுதியில் அவ்வப் போது மழை தூறிக்கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெருஞ் சாணி, சிற்றார் அணைகள் மூடப்பட்டிருந்த நிலையில் வியாழனன்று பாசனத்திற்காக மீண்டும் அணை திறக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. வியாழனன்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக பூதப் பாண்டியில் 15.4 மில்லி மீட்டர் மழை பதி வாகியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் வியாழ னன்று காலை 39.16 அடியாக இருந்தது. அணைக்கு 664 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 639 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 59.10 அடியாக உள்ளது. அணைக்கு 391 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.48 அடியாக உள்ளது. அணைக்கு 60 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-2 அணை யின் நீர்மட்டம் 11.58 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.90 அடியாக வும், மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 28.63 அடியாகவும், உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.50 அடி யாக சரிந்து உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு: பேச்சிப்பாறை-13.2 மில்லி மீட்டர், பெருஞ்சாணி-8.4, சிற்றார்-1 15, சிற்றார்-2 4.8, பூதப்பாண்டி-15.4, களியல்-5.8 கன்னி மார்- 5.8, கொட்டாரம்-2.4, குழித்துறை-7.5, மயிலாடி- 3.6, நாகர்கோவில்-6.2, தக்கலை-2, சுருளோடு-9, பாலமோர்-12.6, மாம்ப ழத்துறை-6.10, திற்பரப்பு-5, ஆரல்வாய்மொழி-7, கோழிப்போர் விளை-3, அடையாமடை-6.2, குருந்தன்கோடு-4.2, முள்ளங்கினா விளை-3.6 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.