சென்னை, மே 28- இ-சேவை மையங்களை தொடர்ந்து இயக்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது. கட்சியின் மாநிலக் குழு கூட்டம் மே 24, 25 தேதிகளில் புதுக்கோட்டையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
அறிவிக்கப்படாத மின்வெட்டும், தொழில் பாதிப்பும்
தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் தொழில்கள் முடங்கிப்போய் இருந்தன. கடந்த ஓராண்டு காலமாக தொழில்கள் செயல்பட துவங்கியுள்ள நிலையில் பெருநகரங்களை தவிர்த்து இதர இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டி னால் தொழில்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்வு நடைபெறும் காலம் என்பதால் மாணவர்களும் பாதிக் கப்படுகின்றனர். மின் தேவையை விட மின் உற்பத்தி குறைவாக இருப்பதாலேயே மின் வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் மின்வாரி யத்திற்கு 1 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அப் போதைய அதிமுக அரசு சரியான திட்டமிடல் இல்லாததும், புதிய மின் திட்டங்களை துவக்க எந்த முயற்சியும் எடுக்காததுமாகும். தமிழகத்திற்கு தேவையான மின் உற் பத்தியை திட்டமிட வேண்டிய மின்வாரிய நிர்வாகம் அதில் கவனம் செலுத்தாமல் பயன் பாடு அதிகம் உள்ள நேரங்களில் (Peak Hours) நமது அனல்மின் நிலையத்தின் உற்பத்தியை நிறுத்திவிட்டு தனியாரிடம் கூடு தல் விலைக்கு மின்சாரம் வாங்கும் நட வடிக்கையை மேற்கொள்கிறது. இது கை விடப்பட வேண்டும். தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான உற்பத்தி நிலையங்களில் முழு வீச்சில் மின் உற்பத்தி துவக்குவதோடு நடைபெற்று வரும் மின் உற்பத்தி திட்டங்களை உடனடியாக பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், புதிய மின் திட்டங்களை போர்க்கால அடிப்ப டையில் உடனே துவங்க வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். மேலும், மின்சாரத்தை கூடுதல் விலைக்கு தனியாரிடமிருந்து கொள்முதல் செய்வதை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும்.
காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துக!
காவிரியில் அபரிமிதமான மழைப் பொழி வினால் பல நேரங்களில் காவிரி ஆற்றில் உபரியாக திறக்கப்படும் தண்ணீரை பாச னம் மற்றும் குடிநீர் தேவைக்காக பயன்படும் வகையில் துவங்கப்பட்டுள்ள காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதிகள் ஒதுக் கப்பட்டு பணிகள் தற்போது துவங்கியுள் ளது. இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டப் பாதை யில் எந்த மாற்றமும் இல்லாமல் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். இ-சேவை மையங்களை மூடாதீர்! தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாகத் தின் கீழ், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ- சேவை மையங்கள் 2015 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. அந்த மையங்களில், பொது மக்களுக்கு வருவாய் சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள், பிறப்பு - இறப்பு சான்று கள், சிட்டா அடங்கல் என நூற்றுக்கும் மேற் பட்ட மின்னணு சேவைகள் தரப்படுகின்றன. இந்தநிலையில், இ-சேவை மையங் களை இணைப்பது என்ற பெயரில் 96 இ- சேவை மையங்களை மூட உள்ளதாக தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள் ளது. இந்த இ-சேவை மையங்களில் ஏராள மான இளம் தொழிலாளர்கள் மாதம் ரூ.7,500 மட்டுமே ஊதியமாகப் பெற்று பணியாற்று கிறார்கள். அவர்களிடம், வாய்மொழி உத்த ரவு மூலம் பொருட்களை திருப்பி வழங்கு மாறு நிர்பந்தப்படுத்தியுள்ளனர். அவர்களின் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (Login ID மற்றும் Password) முடக்கப்பட்டு, அவர்களை வேலையில் இருந்தும் நீக்கம் செய்துள்ளனர். இந்த 96 இ-சேவை மையங்களை மூடு வது என்ற முடிவை அரசு திரும்பப்பெற்று தொடர்ந்து அவற்றை இயக்க வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம். மேலும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கூடுதலான இ-சேவை மையங்களை திறக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். ஏற்கனவே, சட்டப்பேரவையில் தமிழ் நாடு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டபடி இ-சேவை மையங்களை வலுப்படுத்தி, சேவைகளைத் தடையில்லா மல் வழங்கிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.