முதல்வர் தலையிட்டு சரிசெய்ய ஆசிரியர்கள் கோரிக்கை
திருப்பூர்,ஏப்.15- உத்தரவை அமல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்வது, முத லமைச்சருக்கே தவறான தகவல் அளிப்பது என தொடக்கக் கல்வித் துறையில் நிர்வாக அலங்கோலங்கள் மிகவும் கவலை யூட்டுகின்றன. இதில் தமிழக முதல்வர், கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி யுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் செ.நடேசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: நடுநிலைப்பள்ளி தலைமை யாசிரியர்கள் வழக்கில் தொடக்கக் கல்வித் துறை 2017 இல் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளு படி செய்த சென்னை உயர்நீதி மன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் எட்டு வாரங்களுக்குள் தீர்ப்பை நிறை வேற்ற வேண்டும் என காலவரம்பு நிர்ணயித்தது. 3.1.2019 அன்று அளித்த தீர்ப்பை இரண்டு ஆண்டு களுக்கு மேலாக நிறைவேற்றாமல், அந்தத் தீர்ப்பைப் புரிந்து கொள்ளா மல் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதை நிராகரித்து உத்தரவிட்ட அறிவு சான்ற பெருமை கொண்டது தொடக்கக்கல்வித் துறை. இதுகுறித்து தமிழக முதல் வருக்கு 2021 ஜுலை 20 அன்று முறை யீடு செய்தபோது, முதல்வர் அலு வலகம் ‘உங்கள் கோரிக்கை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது’ எனத் தெரிவித்தது. ஆனால். 2021 ஆகஸ்ட் 4 அன்று முதல்வர் அலுவலகத்துக்கே ‘கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’ என்று முறையற்ற பதிலை அளித்தது தொடக்கக் கல்வித் துறை.
2021 ஆகஸ்ட் 5 அன்று பள்ளிக் கல்விச் செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு எண் 1004/2021 தொடரப்பட்டது. ஆகஸ்ட் 18 விசாரணையில் டிவிஷன் பெஞ்ச் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி யும் தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? என மூன்று வாரங்களுக்குள் அரசு வழக்கறிஞர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி கள் ஒத்திவைத்தனர். செப்டம்பர் 15 அன்று “கோரிக்கை யை நிராகரித்தது தவறு. இன்னும் மூன்று வார காலத்துக்குள் 1.6.1988 அன்று சிறப்பு நிலையில் ஊதி யத்தை நிர்ணயித்து கோரிக்கை யை முழுமையாக நிறைவேற்றி விடு கிறோம்: ஊதியத்தை திருத்தி யமைத்து 1.6.1988 முதல்30.6.2001 முடிய பணிக் கால ஊதிய நிலு வையையும் 1.7.2001 முதல் இன்று வரையான ஓய்வூதியத்தையும் திருத்தியமைத்து ஓய்வூதிய நிலு வையையும் அளித்து விடுகிறோம்,” என அரசு வழக்கறிஞர் மூலம் உறுதியளித்தது .அதற்கேற்ப 23.9.2021 அன்று ஊத்துக்குளி வட்டா ரக் கல்வி அலுவலரை உத்தரவு பிறப்பிக்க வைத்து பணிக்கால நிலுவையை உடனடியாக வழங்கி ஓய்வூதியத்தையும் திருத்தி அமைத்து 21 ஆண்டு கால ஓய்வூதிய நிலுவையையும் அவசரகதியில் வழங்க உத்தரவிட்டு 6.10.2021 அன்று அரசு வழக்கறிஞர் மூலம் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றி விட்டதாக நீதிபதிகள் முன் தெரிவித்தது. ஆனால் அவசர கதியில் பிறப்பித்த அந்த உத்தரவு ஊதிய நிர்ணய அரசு ஆணைகளைப் பின்பற்றாமல் பிறப்பிக்கப்பட்டுள் ளது என ஆசிரியர் தரப்பு தெரி வித்தது. அரசு வழக்கறிஞர், ஆசிரியர் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்தவற்றைப் பரிசீலித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பத்தி 3 இல் ‘In view of the above, this Contempt petition is closed, it is made clear that if the contempt petitioner is aggrieved by this said proceedings dated 23.09.2021,it is open to him to challenge the same in accordance with law, என்று தீர்ப்பில் உத்தரவிட்டுள் ளார்கள்.
ஆசிரியர்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் தவறான உத்தரவு
நீதிமன்றத் தீர்ப்பின் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்ளாமை, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத் தில் முதல்வருக்கு முறையீடு செய்யும் போது, தமிழக முதல்வ ருக்கே தவறான தகவல் அளிப்பது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் டிவிஷன் பெஞ்ச்-ல் நீதிபதிகள் முன் “கோரிக்கையை நிராகரித்தது தவறு என ஒப்புக் கொள்வது, தீர்ப்பின்படி கோரிக்கையை நிறைவேற்ற அவசர கதியில் அரசுஆணைகளைப் புரிந்து கொள்ளாமல் ஆசிரியருக்கு வாழ்நாள் முழுவதும் அவருக்குப் பின் குடும்ப ஓய்வூதியத்திலும் இழப்பு ஏற்படுத்தும் தவறான உத்த ரவு பிறப்பிக்க வைத்து நீதிபதி கள் முன் சமர்ப்பிப்பது ஆகியவை இன்று தொடக்கக் கல்வித் துறை யில் வாடிக்கை ஆகிவருகிறது. தமிழக முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் தொடக்கக் கல்வித் துறையில் நிகழும் அலங்கோலங்களை முழு வதுமாக நீக்கி கல்வித்துறை யிலும் சமத்துவம், சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற உயரிய இலட்சி யங்களை செயல்படுத்துவார்கள் என கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலனில் அக்கறை கொண்டுள்ள கல்வியாளர் சமுதா யம் நம்புகிறது; எதிர்பார்க்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.