states

தீக்கதிர் விரைவு செய்திகள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்தங்கிய எலான் மஸ்க்!

உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து 2-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த திங்களன்று டெஸ்லா நிறுவன பங்குகள் 4 சதவிகி தம் சரிவைச் சந்தித்ததால், 164 பில்லியன் டாலர்களுடன் எலான் மஸ்க் 2-ஆவது இடத்திற்கு இறங்கி யுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எல்விஎம்எச் நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 171 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மேகாலயாவில் அடுத்த ‘ஆட்டத்தை’ ஆரம்பித்தது பாஜக!

மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியைச் சேர்ந்த  பெர்லின் சங்மா, பெனெடிக் மரக் ஆகிய 2 எம்எல்ஏ-க்கள், அண்மைக் காலமாக பாஜக வுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதேபோல சாமுவேல் சங்மா என்ற  சுயேச்சை எம்எல்ஏவும், எச்.எம். ஷாங்ப்லியாங் என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வும் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் இந்த நான்குபேரும், தில்லியில் பாஜக  தேசியத் தலைவர்  ஜெ.பி. நட்டா முன்னிலையில் பாஜக-வில் இணைந்துள்ளனர். 2023-ஆம் ஆண்டில் மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் உத்தேச வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

கர்நாடக சட்டப்பேரவைக்கு 2023 ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்த லுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் இப்போதே பிரச்சாரத்தை துவங்கி விட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஒருபடி மேலேசென்று, ஹசன் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், தற்போதைய அரிசிகெரே தொகுதி மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ-வின் பெயரும் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல்காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்ற ரகுராம்ராஜன்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியா குமரியில் துவங்கி, இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநி லங்களைக் கடந்து, தற்போது ராஜஸ்தானில் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலை யில், இந்த பயணத்தின் 98-ஆவது நாளில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ராகுல் காந்தியின் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து, நடைப்பயணத்தில் கலந்து கொண்டார்.

உச்சநீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகளை நியமிக்கப் பரிந்துரை!

தில்லியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 6 நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பீகாரில் உள்ள பாட்னா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி. சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள  அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

6 நீதிபதிகளை கொண்ட அமைப்பாக மாறிய கொலீஜியம்!

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரைகளை அளிக்கும் கொலீஜியம் அமைப்பில், குறைந்தபட்சம் ஒரு நீதிபதியாவது, ஓய்வு பெறு வதற்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளவராக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய கொலீஜியத்தில் இடம்பெற்றிருக்கும் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எஸ். அப்துல் நசீர், கே.எம். ஜோசப், எம்.ஆர். ஷா ஆகிய நால்வரும் தலைமை நீதிபதியாகும் நிலையில் இல்லை. இதன் காரணமாக, வரும் நாட்களில் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கன்னா கொலீஜியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, கொலீஜியம் அமைப்பு தற்போது 6 உறுப்பினர்களைக் கொண்டதாக மாறியுள்ளது.

ஈஷா கல்வி நிறுவனம்தானாம்

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்ட விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஈஷா அறக்கட்டளையை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் என்றும் மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் கல்வி நிறுவனம் உள்ளதால் விலக்கு பெற முடியும்’ என்று கூறி நோட்டீஸை ரத்து செய்துள்ளது.

நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 14- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: வியாழக்கிழமை (டிச. 15) முதல் சனிக்கிழமை (டிச. 17) வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் லேசானது  முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை வியாழக்கிழமை (டிச. 15) மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள் மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வெள்ளிக்கிழமை (டிச. 16) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45  கிலோ மீட்டர் வேகத்திலும், இடை யிடையே 55  கிலோ  மீட்டர் வேகத்தி லும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர் கள் இப்பகுதிகளுக்கு செல்ல  வேண்டாமென்று அறிவுறுத்தப்படு கிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோவில் தொடர்பான வழக்ைக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் 

சென்னை, டிச. 14-   ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கணக்கு வழக்குகளை ஒன்றிய அரசின்  கணக்கு தணிக்கை துறை மூலம் தணிக்கை செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கணக்கு வழக்குகளை ஒன்றிய அரசின்  கணக்கு தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி யும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை நிர்வகிக்கும் நிர்வாகிகள் முறையாக நிர்வகிக்கவில்லை என்பதால் கோவில் நிர்வாகத்தை முழுமையாக மாற்றியமைக்க உத்தரவிட கோரியும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதி மன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை புதனன்று (டிச. 14) விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கணக்கு வழக்குகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தணிக்கை செய்து வருவதால், ஒன்றிய கணக்கு தணிக்கை துறையினரைக் கொண்டு தணிக்கை செய்யும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் முழுமையாக மாற்றப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லாமல் ஆகிவிட்டதாகவும், கோவில் நிர்வாகம் முழுவதையும் மாற்றியமைக்கும்படி உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிக ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் கணவன் -மனைவி உறவில் பாதிப்பு

சென்னை,டிச.14- அதிக அளவிலான ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக கணவன் – மனைவி உறவு பாதிக்கப் படுவதாக விவோ நடத்திய ‘ஸ்விட்ச் ஆப்’ ஆய்வில்  தெரிய வந்துள்ளது.  தொழில்நுட்பம் என்பது நமது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் பல வழிகளில் நமக்கு  உதவக்கூடிய ஒன்றாகும். அதே சமயம் இதன் அதிகப்படியான பயன்பாடு தீங்கு விளைவிக்கும். அது நமது உறவுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்து கிறது என்று விவோ இந்தியாவின் தலைமை அதிகாரி யோகேந்திர ஸ்ரீராமுலா கூறுகிறார். சுவாரஸ்யமாக, தங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடும்போது கூட தங்கள் தொலை பேசியில் இருப்பதை 67 விழுக்காட்டினர் ஒப்புக் கொண்டனர், ஆனால் 89 விழுக்காட்டினர் தங்கள் மனைவியுடன் பேசுவதற்கு குறைந்த நேரத்தை செலவிடுவதாகக் கூறியுள்ளனர். அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாட்டால், தங்கள் உறவு பலவீனமடைந்துள்ளதாக 66விழுக்காட்டினர் கூறியுள்ளனர். மேலும் 70 விழுக்காட்டினர் தாங்கள்  ஸ்மார்ட்போனில் மூழ்கியிருக்கும் போது, தங்கள்  மனைவி குறுக்கீடு செய்தால், எரிச்சல் அடைவ தாக தெரிவிக்கின்றனர்.

பொங்கலுக்கு ரயிலில் செல்ல  முன் பதிவு தொடங்கியது

சென்னை,டிச.14- பொங்கலையொட்டி ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்ய  முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை 2023  ஜனவரி 15 ஆம் தேதி கொண்டா டப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ரயில் முன்பதிவு குறித்த தகவலை தெற்கு ரயில்வே அறிவித்தது. அரசுப் பேருந்து அரசு விரைவு பேருந்துகளில் 300 கி.மீ தூரத்திற்கு மேல்  செல்லக்கூடிய அரசு பேருந்துக ளுக்கு 30 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடை முறையில் உள்ளது. அந்த வகை யில் ஜனவரி 12 ஆம் தேதி பயணம்  செய்வதற்கு முன்பதிவு துவங்கி யது.

4 அமைச்சர்களின் துறை மாற்றம்:  6 பேருக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை,டிச.14- தமிழக அமைச்சரவையில் 4 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில  அமைச்சரவையில் இரண்டாவது முறையாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூத்த அமைச்சரான ஐ.பெரிய சாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து வந்த கூட்டுறவுத்துறை பெரிய கருப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த ராமச் சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், மதி வேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச் சாமியிடமிருந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் மற்றும் ஓய்வூதியம், ஓய்வு கால நன்மைகள் ஆகிய துறைகள்  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக வழங்கப் பட்டுள்ளது. அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில்  வாரியம், அமைச்சர் ஆர்.எஸ் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் காந்திக்கு பூதானம் மற்றும் கிராம தானம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை இதுவரை கவனித்து வந்த  அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை கவனிப்பார். சிறப்பு திட்ட  அமலாக்க துறையை முதல்வர் கவனித்து வந்தார். அந்தத் துறை உதய நிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

25 ஆண்டுகாலத்திட்டம் சீனா-ஈரான் உடன்பாடு

பெய்ஜிங், டிச.14- இரு தரப்பு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களுடன் உடன்பாட்டை சீனாவும், ஈரானும் எட்டியுள்ளன. வளர்ந்து வரும் நாடுகளைக் கட்டுப் படுத்துவதற்கான அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு தடை களை விதித்து வருகின்றன. அத்தகைய தடைகளை எந்தவித எதிர்ப்பும் இல்லா மல் நடைமுறைப்படுத்த, அந்த நாடுகளில் அமைக்கப்படும் ஜனநாயக அரசுகளைக் கவிழ்க்கும் வேலைகளையும் செய்து வருகின்றன. இந்நிலையில், அந்த சதி வேலைகளில் இருந்து தப்பித்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன. சீனாவும், ஈரானும் பல மாதங்களாக விவாதித்து, 25 ஆண்டு காலத்திற்கான உடன்பாட்டை எட்டியுள்ளன. இத்திட்டத் தின் அடிப்படையில் 16 திட்டங்களை நடை முறைப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. முதல் கட்டமாக நடைபெறவிருக்கும் இந்தத் திட்டங்கள் எண்ணெய், எரிவாயு, வங்கி, முதலீடு மற்றும் கேந்திரத் துறைத் திட்டங்கள் என்று வரிசைப்படு த்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்றும், இரு நாட்டு ஜனாதிபதிகளின் ஒப்புதல்களுக்காக திட்டங்கள் வைக்கப் பட்டுள்ளன என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990களில் உருவான இந்த 25 ஆண்டு கால உடன்பாடு என்ற கருத்து, பல்வேறு சர்வதேச அரசியல் நிகழ்வுகளால் தள்ளிப் போனது. தற்போது இத்தகைய உடன்பாடு இரு தரப்புக்கும் பெரும் அளவில் பலன ளிக்கும் என்பதோடு, தங்கள் மீதான தடை களையும் தகர்க்கும் என்றும்நம்பு கிறார்கள். ஈரானுடனான உறவோடு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடு களுடனான உறவுக்கும் சீனா முக்கியத் துவம் தந்து வருகிறது.