மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் குற்றச்சாட்டு
ராஞ்சி/ஹவுரா, ஜூலை 31 - ஜார்க்கண்டில் நடைபெறும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தீவிர முயற்சியில் ஈடு பட்டுள்ளது என்றும் அதற்காக ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பொருட்டு கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி இறைத்துள்ளது என்றும் ஜார்க்கண்ட் மாநில கூட்டணி அரசின் அமைச்ச ரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலை வருமான ஆலம்கீர் ஆலம் குற்றம்சாட்டி யுள்ளார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் பெரு வாரியான பணத்துடன் ஜார்க்கண்டைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமை ச்சர் ஆலம்கீரின் மேற்கண்ட குற்றச்சாட்டு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜார்க்கண்டில் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக உள்ளார். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்சல் கொங்காரி ஆகிய மூவரும் சனிக்கிழமை மாலை மேற்குவங்க மாநிலம் ஹவுராவி லிருந்து ஒரு காரில் பெருவாரியான பணத்து டன் புறப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் மேற்கு வங்க காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து மேற்குவங்க காவல்துறை யினர் தீவிரமாக செயல்பட்டு அவர்களது காரை மடக்கிப் பிடித்தனர். அதில் சோதனையிட்ட போது கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பெரும் பணத்துடன் பிடிபட்ட மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையும் அக்கட்சியின் மேலிடம் இடைநீக்கம் செய்தது.
இந்த நிலையில் ஞாயிறன்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆலம்கீர் ஆலம், ஜார்க்கண்ட் டில் ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் தங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 கோடி அளவிற்கு பணம் கொடுத்து விலை க்கு வாங்குவதற்கு பாஜக முயற்சிக்கிறது என்றும், பாஜகவினர் மூலம் கிடைக்கப்பெற்ற பணம்தான் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் களிடம் சிக்கியுள்ளது என்றும்குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, ஹவுராவில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக, ஜார்க்கண்ட் காங்கிரசின் மற்றொரு சட்டமன்ற உறுப்பின ரான ஜெய்மங்கள், காவல்துறையில் புகார் பதிவு செய்துள்ளார். பெர்மோ சட்டமன்ற தொகுதி யின் உறுப்பினரான அவர், கைது செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் காங்கிரசின் இதர உறுப்பினர் களையும் பாஜகவிடமிருந்து பணம் வாங்கித் தருவதாகவும், ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சி அமைத்தால் ஒவ்வொருவருக்கும் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகவும் தனக்கு ஆசை காட்டி னார்கள் என அந்தப் புகாரில் கூறியுள்ளார். இதை செய்தியாளர் சந்திப்பின்போது சுட்டிக் காட்டிய ஆலம்கீர், மாநிலத்தில் ஜேஎம்எம் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பெருவாரியான பணத்தை பாஜக இறக்கிவிட்டிருக்கிறது என்று சாடினார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்மங் கள், தனது புகாரில், “ராஜேஷ் கச்சப் மற்றும் நமன் பிக்சல் கொங்காரி ஆகிய எம்எல்ஏ க்கள் என்னை கொல்கத்தாவிற்கு வருமாறு கூறி னார்கள். ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தலா ரூ.10 கோடி அளிக்க ஏற்பாடு இருப்பதாகவும் வந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறி னார்கள். அதுமட்டுமல்ல, என்னை கொல்கத்தா விலிருந்து கவுகாத்திக்கு அழைத்துச் செல்வ தாகவும், கவுகாத்தியில் அசாம் பாஜக முத லமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்” என்றும் விவரித்துள்ளார். ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பெருமளவு பணம் சிக்கியிருப்பதும், அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கான பாஜக வின் சதிவேலை பற்றிய புகார் வெளியாகி யிருப்பதும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா - என்சிபி கூட்டணி ஆட்சியை கவிழ்த்த கையோடு ஜார்க் கண்ட் அரசையும் கவிழ்க்க பாஜக மேலிடம் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்பது தெரிகிறது.