கொல்கத்தா, மே 17- 2024 மக்களவைத் தேர்தலில் காங்கி ரஸ் வலுவாக இருக்கும் இடங்களில் அவர் களை எங்கள் கட்சி ஆதரிக்கும்; பதிலுக்கு அவர்களும் மற்ற கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வ ருமான மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இதற்கு மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை குழு தலைவரு மான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலளித்துள் ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸூடன் புரிந்துணர்வு இல்லாமல் முன்னேற முடியாது என்று மம்தா பானர்ஜி நினைக்கிறார். கர்நாடக தேர்தலுக்கு முன்பு காங்கிரஸூக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியதை நாம் கேட்டிருக்கிறோமா?. தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸூக்கு வாக்களிக்குமாறு கர்நாடக மக்களிடம் அவர் ஒரு போதும் வேண்டுகோள் விடுத்த தில்லை. இதே மம்தா பானர்ஜிதான் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் பாஜக-வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உதவினார். ஆனால் அவர் கர்நாடகா செல்லவில்லை. இன்று காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் இல்லாமல் மேற்கு வங்கத்தில் முன்னேறுவது கடினம் என்று அவர் கருதுகிறார். ஏனென்றால், மாநி லத்தில் காங்கிரஸின் பிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில நாட்களுக்கு முன், முர்ஷிதாபாத்தின் சாகர்டிகியில் நடந்த இடைத்தேர்தலில் ஏறக்குறைய 50 ஆண்டு களுக்கு பிறகு மாபெரும் ஆணையால் நாங்கள் வெற்றி பெற்றோம். கர்நாடகாவில் நாங்கள் வெற்றி பெற்றாலும் ராகுல் காந்தி யை ஒருமுறை கூட அவர் குறிப்பிட வில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும் ஒவ்வொரு பிராந்திய கட்சிகளும் எங்களுடன் இருந்ததா என்று பாராமல் ராகுல் காந்தி பற்றியும், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை பற்றி யும் பேசி வருகின்றனர். ஆனால் ராகுலை பற்றி மம்தா பானர்ஜி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ராகுல் காந்தி எம்.பி. பதவி யில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதும், ஒரு முறை கூட அவரது பெயரை மம்தா குறிப்பிடவில்லை. நேரடியாக பேசுங்கள். காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தியுங்கள். விவாதி யுங்கள். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தியுங்கள். 2011-இல் மேற்கு வங்கத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது, சோனியா காந்தி இல்லாவிட்டால், மாநி லத்தை வெல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆட்சிக்கு வந்தபிறகு மாநிலத்தில் இருந்து காங்கிரஸை விரட்டி யடித்தீர்கள். எனவே மேற்கு வங்கத்தில் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் எதிராக எங்கள் போராட்டம் நிச்சயமாக இருக்கும். இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.