states

போட்டி அரசு நடத்தும் ஆளுநருக்கு கண்டனம்

சென்னை,ஏப்.24- போட்டி அரசு நடத்தும் தமிழ்நாடு ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். முந்தைய ஆளுநர் மாற்றலாகி, புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி அறிவிக்கப் பட்ட நேரத்தில், அவர் சாகசக்காரராக பரபரப்பான செய்திகள் வெளியாகி யது. நீட் தேர்வு முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை நீண்டகாலம் கிடப்பில் போட்டு, திருப்பி அனுப்பினார்.

இதன் தொடர்ச்சியாக சட்டப் பேரவையில் அந்த சட்ட மசோ தாவை மீண்டும் ஒரு முறை தீர்மா னமாக  நிறைவேற்றி அனுப்பிய பிறகும் எந்த முடிவும் எடுக்காமல் தாமதித்து வருகிறார். இந்த நிலையில் சட்ட மரபின் படியும், பதவி வழி முறையிலும் பல்கலைக் கழ கங்களின் “வேந்தராக” செயல்படும் ஆளுநர் வரும் 25.4.2022 மற்றும் 26.4.2022 தேதிகளில், ஆளுநர் மாளிகையில் (ராஜ்பவன்) “வளர்ந்து வரும் உல கில் இந்தியாவின் பாத்திரம்” மற்றும் “2047 ஆம் ஆண்டில் உலகின் தலைவ ராகும் இந்தியா” என்ற பொருளில் பல்கலைக் கழகங்களின் சிறப்பு மாநாடு கூட்டியுள்ளார். இதில் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்கலைக் கழ கங்கள், தனியார் பல்கலைக். கழகங்க ளின் துணை வேந்தர்களும் பேராசிரி யர்கள், பேராசிரியர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப் ப்பட்டுள்ளது. மக்களாட்சியின் அடிப்படை கோட்பாடுகளை நிராகரித்தும், தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்த உணர்வுக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர் திரு.ஆர்.என். ரவியின் நடவ டிக்கை அரசியல் அமைப்புச் சட்ட அத்து மீறல் என்பதுடன் மக்கள் பிரதிநிதி ஆட்சி முறைக்கு எதிரான தலையிட்டு, போட்டி அரசை நடத்தும் அதிகபட்ச அத்துமீறலாகும். தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்ற வன்மத்துடன் செய்ய ப்படும் ஆளுநர் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமை யாக கண்டிக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் மாநில அரசுக்கும், மக்களாட்சிக்கும் வழங்கி யுள்ள சட்ட உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் கூட்டியுள்ள பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டை உடன டியாக ரத்து செய்ய வேண்டும். சட்ட மிறலில் ஈடுபடும் ஆளுநரின் மாநாட்டை துணை வேந்தர்களும், பேராசிரி யர்களும் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.