புதுதில்லி, மார்ச் 26- வரும் ஏப்ரல் 1 முதல் ஒன்றிய அரசாங்கம் சுங்கச்சாவடி ‘டோல் கேட்’ கட்டணங்களை உயர்த்திட உத்தேசித்திருப்பதற்கு அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை உடனடியாக ஒன்றிய அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று சம்மேளனம் கோரி யுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து, இந்த மார்ச் 31 பகல் 12 மணி முதல் 12.10 வரை பத்து நிமிடங்களுக்கு அனைத்து வாகனங்களையும் இயக்காமல் நிறுத்தி வைத்திடுமாறு சாலையைப் பயன் படுத்துவோர் அனைவரையும் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.
சட்டவிரோதம் - ஒழுக்கக்கேடு
சுங்கச் சாவடி கட்டணங்களை உயர்த்து வது அனைத்து விதிகளுக்கும் எதிரான தாகும். சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்ட சமயத்தில் சுங்கச்சாவடிக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. இதன்பின்னர் சில ஆண்டுகள் கழித்து இப்போது அக்கட்ட ணங்களை உயர்த்துவது சட்டவிரோத மானதாகும், ஒழுக்கக்கேடானதுமாகும். எரிபொருள் கட்டணங்கள், இன்சூரன்ஸ் பிரிமியங்கள் மற்றும் சுங்கக் கட்டணங்கள் அதீதமாக அதிகரித்திருப்பதால், மோட்டார் தொழில் மிகவும் நிதி நெருக்க டிக்கு உள்ளாகி இருக்கக்கூடிய நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து மீள ஏதேனும் சலு கைகள் அளிக்கப்பட வேண்டியது அவசிய மாகும். ஆனால், அதற்கு எதிராக, இப்போது மேலும் சுங்கக் கட்டணங்களை உயர்த்து வது, பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருக்கும் மோட்டார் வாகனத் தொழி லையே அழித்து ஒழித்துவிடும்.
சூறையாடல்
ஒன்றிய அரசாங்கம், பெட்ரோல் மற்றும் டீசல் மீது சாலை வளர்ச்சி வரி (செஸ்) என்ற பெயரில் கட்டணம் வசூலித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த தாகும். இப்போது ஒன்றிய அரசாங்கம் அதன் பெயரை “உள்கட்டமைப்பு வளர்ச்சி வரி (செஸ்)” என்று மாற்றியிருக்கிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் வரி (செஸ்) கட்டணங்கள், கட்டுமானம், சாலைகள் பராமரிப்பு முதலானவற்றிற்குப் பயன் படுத்திக்கொள்ளப்பட இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் சுங்கக் கட்டணங் களை உயர்த்துவது சட்டவிரோதம். இது, மக்களைச் சூறையாடும் நடவடிக்கையைத் தவிர வேறல்ல. எனவேதான் சம்மேளனம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் சாலை யைப் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் அனைத்து வாகனங்களையும் மார்ச் 31 அன்று பகல் 12 மணி முதல் 12.10 வரை பத்து நிமிடங்களுக்கு நிறுத்தி வைத்திடு மாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள் கிறோம் என்று அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேள னம் கேட்டுக்கொண்டுள்ளது. (ந.நி.)