சென்னை, மார்ச் 14- தமிழ்நாட்டில் வணிக வரி, பத்தி ரப் பதிவு மற்றும் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி நிலுவை ஆகியவை சேர்த்து, இந்தாண்டு ரூ.1.50 லட்சம் கோடியாக வருவாய் உயரும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை நந்தனத்திலுள்ள வணிகவரி அலுவலகத்தில், வணிகவரி இணை ஆணையர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தி யாளர்களிடம் அமைச்சர் கூறியதா வது:- கடந்தாண்டை காட்டிலும் வணிகவரித் துறையில் இந்தாண்டு ரூ.24,528 கோடியும், பதிவுத் துறையில் ரூ.3,588 கோடியும் என, ரூ.28,116 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. வணிக வரி, பதிவுத் துறை வருவாய் மற்றும் ஒன்றிய அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையும் சேர்த்து இந்த ஆண்டு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு ஒன்றிய அரசு இதுவரை ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தரவேண்டி யுள்ளது. போலி ஆவணங்கள் பதிவு குறித்த மனுக்கள் அதிகளவில் வருவதால் இது தொடர்பாக ஆய்வு செய்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் தொழில்நுட்ப கோளாறு களை சரி செய்யும் நோக்கில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் புதிதாக 2 சேவைகளை கூடுதலாக சேர்க்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.