states

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூல்: அரசு எச்சரிக்கை

சென்னை, ஜூன் 7- மாற்றுத்திறனாளி மாணவர் களிடம் கல்விக் கட்டணம் வசூலித் தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்ட ணம் செலுத்துவதில் இருந்து  தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள் ளது. எனினும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம்  வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திற னாளி மாணவர்களிடம் கல்விக்  கட்டணம் வசூலிக்கும் கல்லூரி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு  அரசு விடுத்துள்ள அரசாணையில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறி கல்வி கட்டணம் வசூ லித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.