மதுரை, ஜூன். 5- கோவில்களில் இனி திருவிழாக் குழு அமைக்கக் கூடாது என்ற உத்த ரவை இந்து சமய அறநிலையத் துறை உறுதியாகக் கடைப்பிடிக்கும் எனக் கூறி அது தொடர்பான உத்தரவு நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இது தொடர்பான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது இந்தக் கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்தக் கோவில் திருவிழாக்களில் எந்த தனி நபர் கமிட்டியும் அமைக்க கூடாது என்று ஏற்கனவே 2017-ஆம் ஆண்டு உயர்நீதி மன்ற உத்தரவு உள்ளது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் திருவிழா நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவுக்கு முர ணானது எனவே இந்து சமய அற நிலை துறை நேரடியாக திருவிழா வை நடத்த வேண்டும்
என வழக்கு தாக்கல் செய்யபட்டிருந்த்து. இந்த மனு ஏற்கனவே நீதிபதி கள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்து சமய அறநிலை யத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலை யத்துறை ஆணையர் முரளீதரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார் அதில், “தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கீழ் செயல்படும் கோவில்களில் திரு விழாக் காலங்களில் திருவிழாக்குழு அமைப்பதால் பல்வேறு புகார்கள் வழக்குகள் வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை சட்டப்படி விழாக்குழு அமைக்க எந்த விதிகளும் இல்லை. எதிர்காலங்க ளில் திருவிழாக்குழு அமைக்கக் கூடாது என அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதை மீறும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்ற உத்தரவை தாக்கல் செய்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.