states

மாமன்ற தீர்மானத்தை மீறி தூய்மைப் பணி தனியார்மயம்

சென்னை, அக்.17- திருநெல்வேலி மாநகராட்சி  தூய்மைப் பணி தனியார்மயமாக்கப் பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் கைது செய்ப்பட்டதற்கு சிஐடியு கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 46  சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். மேற்படி தொழி லாளர்களை திடீரென்று ராம் அண்ட் கோ என்கிற ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைப்பது என்று திருநெல்வேலி மாநகராட்சி முடிவு செய்ததை எதிர்த்து 27.09.2023 அன்று தூய்மை தொழிலாளர்கள் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் கார ணமாக மாநகராட்சி அதிகாரிகள் தொழிற்சங்கத்தோடு நடத்திய பேச்சுவார்த்தையில் சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்களை தனி யாருக்கு விடமாட்டோம் என்று அளித்த  உத்தரவாதத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். அதன்பிறகு 4.10.2023 அன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்திலும் தூய்மை தொழிலாளர்களை தனி யாருக்கு விடுவதில்லை என்று ஒரு  மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பாக மாமன்ற தீர்மானத்திற்கு எதிராக மாநகராட்சியின் ஆணை யாளர், ராம் அண்டு கோ ஒப்பந்தக் காரரை தனது வீட்டிற்கு அழைத்தும், சுய உதவி குழுக்களின் தலைவர், செயலாளர்களை அழைத்தும் நீங்கள் அனைவரும் ராம் அண்டு கோ ஒப்பந்தக்காரரிடம் பணி செய்யுங்கள், அதற்கான ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்திடுங்கள் என்று தொழி லாளிகளை மிரட்டியுள்ளார். ஒப்பந்த ஆவணத்தில் தொழிலா ளர்கள் கையெழுத்திடவில்லை என்றால் யாரையும் வேலைக்கு அனுமதிக்க முடியாது என்று தொடர்ந்து மிரட்டியதன் காரணமாக அனைத்து தொழிலாளர்களும் 14.10.2023 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் 16.10.2023 அன்று நெல்லை மாந கராட்சி அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.  ஆனால்  போராட்டத் திற்கு காவல்துறையினர் அனுமதிக்க வில்லை.  மாமன்ற வளாகத்திற்குள் நுழைந்து விடாமல் வெளியிலேயே தடுத்து நிறுத்தி தடுப்புகளை அமைத்து தொழிலாளர்களை அடைத்தனர். அப்போதும் தொழி லாளர்கள் அமைதியாக இருந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.  

அப்போது காவல் துறையினர் திடீரென்று அனைத்து தொழிலாளர்களையும் கைது செய்ய முயற்சித்தனர். இதை எதிர்த்து தொழிலாளர்கள் கோஷமிட்டனர். ஆனாலும் காவல்துறையினர் சிஐடியு  ஊரகத் தலைவர் ஆர்.மோகன்,  சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.முரு கன் உட்பட அனைத்து தொழி லாளர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து கைது  செய்தனர்.  காவல் துறையின் அத்துமீறலில் சங்கத்தின் துணைத் தலைவர் நாராயணன் நிர்வாகிகள் சுரேஷ், பாக்கியலட்சுமி, கலா உட்பட  பல தொழிலாளர்கள் காயமடைந்த னர். இவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி கொடுக்க கூட காவல்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும்  ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தினரையும் காவல்துறை செய்துள் ளது. காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறலை சிஐடியு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. மாநகராட்சி கூட்டத்தில் தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க மாட்டோம் என்று ஏகமனதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல் ஆணையாளர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்பந்த தாரருக்கு ஆதரவாக தொழிலாளர் களை மிரட்டியது தண்டனைக் குரியதாகும். தமிழ்நாடு அரசு  இப்பிரச்சனையில் உடனடியாக  தலையிட்டு கைது செய்யப்பட்ட வர்களை விடுதலை செய்யவும் மாமன்ற தீர்மானத்தை அவமதித்து, சர்வாதிகாரத்தில் ஈடுபட்ட ஆணை யாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.