சென்னை,மே 6- காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 6 அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். மே 9, 10 ஆம் தேதிகளில் உள்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டதாகவும் விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தரு டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.