states

கொடநாடு வழக்கு : ஜெயலலிதா உதவியாளரிடம் விசாரணை

கோவை,ஏப்.29- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியா ளர் பூங்குன்றனிடம் ஏப்ரல் 29 அன்று தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தியது.  மறைந்த முதல்வர் ஜெயலலி தாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு  குறித்து அவரது  தோழி சசிகலா உள்ளிட்ட 210-க்கும்  மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ள னர். அதிமுக வர்த்தகர் பிரிவு மாநில தலைவர் கடந்த இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர்.  அதைத் தொடர்ந்து அவரது தம்பி சிபியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.  இதைத்தொடர்ந்து  ஜெயலலிதா வின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் ஏப்ரல் 29 அன்று கோவை காவலர் பயிற்சி பள்ளியில்  தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பூங்குன்றன் சுமார் 15 ஆண்டுகளாக ஜெயலலி தாவின் உதவியாளராக இருந்தவர்.