states

நெடுஞ்சாலைத்துறையில் ஓய்வுபெற்ற ஊழியர்களை நீக்கி இளைஞர்களுக்கு வேலை வழங்கிடுக!

விருதுநகர், நவ.19- நெடுஞ்சாலைத்துறையின் சாலை மேம்பாட்டுத் திட்ட அலுவலகங்களில் பணி புரிந்து வரும் ஓய்வூதியர்களை உடனடி யாக நீக்கி விட்டு, வேலையின்றி தவித்து வரும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தமிழக  முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது:  நெடுஞ்சாலைத்துறையில் சாலை மேம்பாட்டுத் திட்டம் -2 இல் உள்ள  அலு வலகங்களில் ஓய்வுபெற்ற பொறி யாளர்கள், அலுவலக மேலாளர் மற்றும்  ஆட்சி அலுவலர் என சுமார் 70 சதவீதத் திற்கும்  அதிகமானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரக்கூடிய நிலை உள்ளது.  

இவர்கள் அனைவருமே நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு நிலை களில் உள்ள பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர்.  ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அதே அலுவலகங்களில்  பணியாற்றி வருகிறார்கள். இதனால் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமலும், படித்து முடித்த இளைஞர்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி வழங்கப்படாத நிலையும் உள்ளது. எனவே தமிழக முதல்வர், நெடுஞ்சா லைத்துறை சாலை மேம்பாட்டுத் திட்ட அலு வலகங்களில் பணிபுரிந்து வரும் ஓய்வு பெற்றவர்களை  உடனடியாக  நீக்கிவிட வேண்டும்.  மேலும், அவர்கள் பணிபுரிந்த இடங்களை காலிப் பணியிடங்களாக அறிவிப்பதோடு, தற்போது பணியில் உள்ள அலுவலர்களுக்கு  முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும். மீதமுள்ள இடங் களை, தமிழகத்தில் படித்து முடித்து வேலைக்கான கனவுகளோடு  காத்திருக்கும்    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.