states

பொறியியல் கலந்தாய்வு தேதியில் மாற்றம்

சென்னை, மே 19- அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி துவங்கும் என அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார். சென்னையில் வெள்ளியன்று (மே  19) செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி, “அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள பொறியியல்கல்லூரிகளின் கலந்தாய்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி துவங்கும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தோம். தற்போது ஒரு மாதம் முன்னதாகவே ஜூலை 2 ஆம் தேதி துவங்கும்”என்றார். கடந்த முறை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தாமதம் மற்றும் நீட் தேர்வு முடிவுகள் தாமதமானதால் பொறி யியல் கலந்தாய்வும் தாமதமாகத் துவங்கப்பட்டது என்றும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. விரைவில் நீட் தேர்வு முடிவுகளும் வரவிருக்கிறது. அதனால், கலந்தாய்வு ஒரு மாதத் திற்கு முன்பாகவே நடைபெறும் என்றும்  அவர் கூறினார். காலஅவகாசம் நீட்டிப்பு அதேபோல், கலை, அறிவியல்  கல்லூரிகளில் சேர விண்ணப்பிப் பதற்கான கால அவகாசமும் மூன்று  நாட்கள் நீடிக்கப்படுகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கல்லூரி களும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே துவங்கும். நுழைவுக் கட்டணம் ரூ. 200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அதிகமாக வந்தால்  இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கலந்தாய்வு முடிந்து  செப். 30 ஆம் தேதி பொறியியல் மாண வர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு கள் துவங்கும் எனவும் அவர் தெரிவித்தார். பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர சனிக்கிழமை (மே 20)  முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க லாம் என்றும் அமைச்சர் கூறினார்.