states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை,மே 22- தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  திங்கட்கிழமை மிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செவ்வாயன்று  (மே 24) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 25 மற்றும் 26  ஆகிய தேதி களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சி யஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை மைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முதலமைச்சர் செயல்பாடு திருப்தி: கருத்துகணிப்பில் தகவல்

சென்னை,மே 22- தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி  உள்ளன. என்பது பற்றி சிவோட்டர் கணக் கெடுப்பு நடத்தப்பட்டடுள்ளது. அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் இந்த கருத்து கணிப்பு நடை பெற்றது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற வர்களில் 85 விழுக்காட்டினர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படு வதாக, தெரிவித்துள்ளனர். 51விழுக்காட்டி னர் திருப்தி என்று தெரிவித்துள்ளனர். 30 விழுக்காட்டினர் மாநில அரசின்செயல்பாடு மிகவும்திருப்தியாக உள்ளது என்று கூறியுள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி, ராகுல் காந்தி ஆகியோர் குறித்தும் தமிழக மக்களிடம் சிவோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள் ளது. இதில் 40 விழுக்காட்டிற்கும் அதிக மானோர் பிரதமரின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்று கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 17 விழுக்காட்டினர்  திருப்தி  என்றும், 40 விழுக்காட்டினர் பேர் ஓரளவு திருப்தி என்றும் கூறியுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் பிரதமராக பதவியேற்க பொருத்தமானவர் மோடியா? ராகுலா? என்றும் கேள்வி கேட்கப்பட்டு தமிழகத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்திக்கு 54 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தக்காளிவிலை   குறையவில்லை

சென்னை, மே 22- வரத்து குறைவு காரணமாக  சென்னை  கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் ஞாயிறன்று நவீன் தக்காளி ஒரு கிலோ ரூ.100க்கும் நாட்டு தக்காளி 95 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது. தொடர் மழை காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநில ங்களில் இருந்து வரும் தக்காளியின் அளவு  50 விழுக்காடு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருந்த 600 டன் தக்காளி வரத்து, தற்போது 300 டன் ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலை அதி கரித்து  கிலோ 100 ரூபாய்க்கும், புறநகர் பகுதி களில் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்ய ப்பட்டது. அதேபோல் பீன்ஸ் விலையும் உயர்ந்து ரூ.110 ரூபாய்க்கு விற்பனையானது.

பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும் இடையே மாநிலங்களின் நிலை: ப.சிதம்பரம்

சென்னை,மே 22- பெட்ரோல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்து ள்ளது. பெட்ரோல்  மீதான வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்க ப்பட்டுள்ளது.  இதேபோன்று மாநில அரசுகளும் வரியை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறி உள்ளது. இதுகுறித்து முன்னாள்  ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  டுவிட்டர் பதிவில் கூறுகையில்,  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு குறித்த அறி விப்பின்போது கலால் வரி என்ற வார்த்தையை நிதியமைச்சர் பயன் படுத்தியுள்ளார். ஆனால் மாநிலங் களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத கூடுதல் கலால் வரியில் இருந்து தான் இந்த வரி குறைப்பு. எனவே, சனிக்கிழமை நான் கூறியதற்கு மாறாக, வரிக் குறைப் பின் முழுச் சுமையும் ஒன்றிய அரசு மீதுதான் விழுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளின் மூலம் மாநிலங்கள் மிகக் குறைவாகவே பெறுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி மூலமாக மட்டுமே வருவாய் வருகிறது. மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிக நிதியை வழங்காத வரை அல்லது அதிக மானியங்களை வழங்காத வரை, அந்த வரு வாயை விட்டுக்கொடுக்க முடியுமா? என்பது ஆச்சரியம். பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும் இடையே சிக்கித் தவிப்பது போல் நிலைமை உள்ளது என்று அவர் தெரி வித்துள்ளார்.

எது கூட்டாட்சி ? – ஒன்றிய  அமைச்சருக்கு   தமிழக நிதியமைச்சர் கேள்வி

சென்னை,மே 22-  ஒன்றிய அரசால் உயர்த்தப் பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரிகளை தற்போது 50 விழுக்காடு மட்டும் குறைத்துவிட்டு மாநில ங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவது தான் கூட்டா ட்சியா? என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவு மூலம் கேள்வி எழுப்பி யுள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கடுமை யாக உயர்த்தியதாக குறிப்பிட்டு ள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான வரியை 250 விழுக்காடு அதாவது 23 ரூபாயும், டீசல் மீதான வரியை 900 விழுக்காடு அதாவது 29 ரூபாயும் ஒன்றிய அரசு உயர்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது, வெறும் 50  விழுக்காடு மட்டும் வரியை குறைத்து விட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவது தான் கூட்டாட்சியா? என்று பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செவிலியர் ஊதியம் உயர்த்தப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை,மே 22-  மக்களைத்தேடி மருந்து வம் திட்டத்தில் 4,848 செவிலியர்கள் ஊதியம் 14ஆயிரம் ்ரூபாயில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சுகாதா ரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்  தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குத்துச்சண்டை வீரர் பாலாஜியை நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து அமைச்சர் விசாரித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையின் படி 5, 971 பேருக்கு 32கோடி மதிப்பில் 30 விழுக்காடு  ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது என்றும் மக்களைத்தேடி மருந்துவம் திட்டத்தில் 4,848 செவிலியர்கள் ஊதியம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்படும்.     அதேபோல் 2,448 முன்களப் பணியாளர்களுக்கும்  3 ஆயிரம் ஊதியம் உயர்த்தி 14 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் ஒப்பந்தத்தில் பணியாற்றும் மகளி ருக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

6 பேர் விடுதலை தொடர்பாக   முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, மே 22 பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்வ தாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறை வேற்றியது. ஆனால், அந்த பரிந் துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் கால நீண்டகாலம் தாமதம் செய்தார் இதனை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத் தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. பேரறி வாளன் விடுதலையைத் தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.கூடாலின் கூறியிருந்தார். இந்நிலையில் உதகையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்  சனிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள மற்ற 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலொசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, நடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற் றனர்.