புதுக்கோட்டை, ஜன.16- புதுக்கோட்டை மாவட்டம் செரியலூர் கிராமத்தில் போர் தேங்காய் விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங் கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மணமேல்குடி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங் குடி, வளப்பிரமன்காடு, பனஞ்சேரி, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் போர் தேங்காய் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டு வருகின்றன. எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்காக, ஒரு போர் தேங்காயை ரூ.300 முதல் ரூ.500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து செல்பவர்களும் உள்ளனர்.
நூற்றுக்கணக்கான தேங்காய்கள்
வழக்கம் போல கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் திங்கட்கிழமை போர்காய் தேங்காய் விளையாட்டு நடந்தது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் மோதி உடைத் தன. சுமார் 500-க்கும் மேற்பட்ட தேங்காய்களுடன் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் சென்றனர். அதேபோல ஞாயிறன்று மேற்பனைக் காடு கிராமத்தில் நடத்தப்பட்ட போர் தேங்காய் பரிசுப் போட்டியில், செரிய லூர் கண்ணையா அதிக தேங்காய் களை உடைத்து முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பையை பரிசாக பெற்றார்.