states

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒப்பந்த முறையை கைவிட சிபிஐ வலியுறுத்தல்

சென்னை,ஜூன் 27- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி களில் ஒப்பந்த முறையை மாநில அரசு  கைவிடவேண்டும் என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை கைவிடக்கோரி 23-06-2023  முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதால் 1000-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படாது. ஏற்ெகனவே பணியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் அந்த பணியில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்ட தொழி லாளர்களுக்கு வேலை இல்லை என்ற  நிலை உள்ளது. நாளொன்றுக்கு ரூ.707 ஊதியம் பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.532 ஊதியம் குறைக்கப்படுகிறது.தொழி லாளர்கள் போராடி வரும் சூழலில் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு எட்டப்படவில்லை.

தமிழ்நாடு அரசின்  நகராட்சிகள் நிர்வாக இயக்குநரகம், திடக்கழிவு மேலாண்மை விதிகளை காரணம் காட்டி இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு மட்டு மல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற னர். ஒன்றிய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளை காரணம் காட்டி ஒடுக்கப்பட்ட பகுதி தொழிலா ளர்கள் பெரும்பான்மையாக  பணிபுரி யும் தூய்மைப் பணியை ஒப்பந்தம் விடுவது பொருத்தமான நடவடிக்கை அல்ல. கழிவுகளும், குப்பைகளும் நாள்தோறும் அதிகரித்து வரும் சூழலில் ஏற்ெகனவே தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் பணியில் உள்ள தொழி லாளர்களை பாதியாக வெட்டிக் குறைப் பது தமிழ்நாட்டின் பொது சுகா தாரத்திற்கும் மிகுந்த அச்சுறுத்தலாக அமையும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடி யாக இந்த ஒப்பந்த முறையை கைவிடவும் அது தொடர்பான அரசா ணைகள், நிர்வாக உத்தரவுகளை திரும்பப் பெறவும் முன்வர வேண்டும்.  போராடும் ஈரோடு மாநகராட்சி தொழி லாளர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.