ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, பிப்.16- பெண்களை பாலியல் வன்கொடுமை செய் தும், வியாபார நோக்கத்துடன் வெளிமாநிலங் களுக்கு பெண்களை கடத்தி, சமூகவிரோதச் செயல்கள் புரிந்த விழுப்புரம் அன்புஜோதி ஆசி ரம விவகாரத்தில் அரசு சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலா ளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப் பட்டுள்ளதும், இளம் பெண்களை போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளதும், பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர் என்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பல்வேறு விதத்தில் சித்ரவதைக்கு உள்ளாக்கியதும் தெரி யவந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் பெண் கள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந் துள்ளனர். அங்கு இருந்தவர்களில் 16 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்ப தும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள் ளது. ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டவர்களை அடித்து துன்புறுத்தியது, மனநலம் பாதிக்கப் பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய் தது, வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநி லங்களுக்கு கடத்தப்பட்டது உள்ளிட்ட பல சமூக விரோதச் செயல்கள் இந்த ஆசிரமத்தில் நடை பெற்றுள்ளதாக ஆய்வு செய்வதற்காக சென்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்பு ஜோதி ஆசிரமம் உரிய அனுமதி பெறா மல் கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள் ளது. இதில் அனுமதிக்கப்பட்டவர்களை விவ சாய வேலைகளுக்கு பயன்படுத்துவது, மாடு மேய்க்க அனுப்புவது போன்ற பல வேலை களை செய்ய வைத்துள்ளனர். அவ்வாறு செய் யாதவர்களை சங்கிலியால் கட்டி வைத்து அடித்து சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவது, குரங்குகளை விட்டு கடிக்க விடுவது, வெளி மாநிலங்களுக்கு கடத்துவது உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் - சிறுமிகளை போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள னர். ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட 25 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள னர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளர்களுக்கு முறையான சிகிச்சையும் அரசு உதவி களையும் வழங்கிட வேண்டும். இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும், பாலியல் வன்பு ணர்வு குறித்தும், காணாமல் போனவர்கள் குறித்தும் உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மையை வெளிகொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு கடுமையான தண்ட னைக்கு உட்படுத்த வேண்டும்.
காப்பகத்திற்கு சீல் வைத்து அரசு கையகப்படுத்துக!
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை செய்து அவர்களை தங்கவைப்ப தற்கான மாற்று ஏற்பாட்டை தமிழ்நாடு அர சாங்கம் செய்ய வேண்டும். உடனடியாக அந்த காப்பகத்தை சீல் வைத்து அரசு கையகப் படுத்த வேண்டும். அனுமதியின்றி நடந்த ஆசிரமத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சமூக நலத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம் அன்பு ஜோதி ஆசி ரமம் குறித்த முழுமையான விபரங்களை வெளிக்கொண்டு வர சிபிசிஐடி விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
கண்டன இயக்கங்களை நடத்துக!
தொடர்ச்சியாக இதுபோன்ற காப்ப கங்களில் முறைகேடுகள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. ஆகவே தமிழ்நாடு முழு வதும் செயல்படும் ஆசிரமங்கள், காப்ப கங்கள், முதியோர் இல்லங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புக்குழு வை ஏற்படுத்தி முறைப்படுத்திட வேண்டும். இச்சம்பவத்தை கண்டித்து வரும் இரண்டு நாட்களும் தமிழ்நாடு முழுவதும் உடனடியாக கண்டன இயக்கங்களை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.