சென்னை, ஜூலை 18- மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது. உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு புதனன்று விசாரணைக்கு வரவுள்ளதால், அமைச்சர் துரை முருகன் தில்லி செல்கிறார். ஆனால், இதற்கி டையே, தில்லியில் ஜூலை 22-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணை யத்தின் 16-வது கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.