புதுதில்லி, ஜூலை 22 - காவிரி மேலாண்மை ஆணை யத்தின் 16-ஆவது கூட்டம் தில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில், நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். கர்நாடகத்தின் சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ் சிங் நேரடியாகவும், கேரள மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பிரதி நிதிகள் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதலாவதாக நான்கு மாநில பிரதிநிதிகளும் நீர் வழங்கல் உள்ளிட்ட புள்ளி விவரங் களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள், காவிரி யில் இருந்து ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் மழைப்பொழிவு அளவு, தண்ணீர் வரத்து ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசின் புதிய அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தால், மேகதாது அணை விவகாரம் குறித்து வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த விவாதமும் நடை பெறவில்லை.