போச்சம்பள்ளி, மே 16- கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள், காலிபிளவர் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டை விட இந்தாண்டு காலிபிள வர் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் டன் கணக்கில் டெம்போ மூலம், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மலை போல் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காலி பிளவரை ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், ‘விளைச்சல் அதிகரிப்பால் காலி பிளவர் விலை குறைந்துள்ளது. ஒரு ஏக்க ரில் பயிரிட ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை குறை வாக விற்பனை செய்யப்பட்டதால் பெண் கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்’ என்றனர்.