ஸ்பெயினில் ஏற்பட்ட புயல் வெள்ளம் காரணமாக 200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். ஒரு வருடத்தில் பொழிய வேண்டிய மழை வெறும் எட்டு மணி நேரத்தில் பெய்ததில் ஸ்பெயினின் தன்னாட்சி பகுதியான வலென்சியா நகரம் மிகப்பெரிய பேரழிவை சந்தித்தது. காலநிலை மாற்றமும் புயலின் தீவிரமும் இத்தகைய மோசமான விளைவுகள் ஏற்பட்ட தற்கு டானா புயலின் தீவிரம் காரணம் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குளிர்ந்த காற்று மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள வெப்ப நீரோடு சந்திக்கும் போது உருவாகும் புயல் டானா புயல் என அழைக்கப்படுகிறது. உலகம் தீவிர காலநிலை மாற்றத்திற்கு உள்ளாகியுள்ள தற்போதைய சூழலில் கடல் வெப்பநிலை அடிக்கடியும், தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக டானா புயலின் தாக்கமும் முன்பை விட மிகத் தீவிரமாகி வருகின்றது. இவ்வாறுதான் இந்த ஆண்டு டானா புயல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. கட்டாய வேலையால் பலியான துயரம் புயலில் உயிரிழந்த பலரும் அலுவலகத்தில் பணியில் இருந்தவர்கள். புயலின் தீவிரம் அதிக மாக இருந்த போதிலும் பல நிறுவனங்கள் ஊழியர் களுக்கு விடுப்பு கொடுக்கவில்லை. கட்டாயமான முறையில் பணியிடத்திற்கு வந்து வேலை செய்ய நிர்பந்தித்துள்ளது. இதனை ஸ்பெயினின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பான சிசிஓஓ (CCOO) (Comisiones Obreras) சுட்டிக்காட்டி யுள்ளது. ஐகேஇஏ (IKEA) நிறுவனம் மற்றும் வலென்சியா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஆகியவற்றில் புயல் மிக தீவிரமடைந்து வெள்ளம் ஆபத்தான நிலைக்கு உயர்ந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். அதற்கு காரணம் நிறுவனத்தை மூடும் முன்பு தொழிலாளர்கள் வெளியே செல்லக் கூடாது என நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக மேலாளர் உறுதியாக சொல்லிவிட்டதுதான். மேலும் தொழிலாளர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை எனவும் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களுள் ஒருவர் வீடியோ மூலமாக தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல ஸ்பெயினில் இயங்கிவரும் மெர்கடோனா என்ற பிரபலமான கார்ப்பரேட் நிறுவனத்தில் சுமார் எண்ணூறு தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் மாட்டிக் கொண்டனர். வெள்ளத்தின் ஆபத்தில் இருந்து தப்பிக்க பலரும் தொழிற்சாலை கிடங்குகளின் கூரைகளில் ஏறி ஆபத்தான முறையில் இரவை கழிக்க வேண்டிய நிலை உருவானது. மறுதினம் மீட்புப்படை அவர் களை மீட்க துவங்கிய போது அந்த நிறுவனத்தின் லோகோவையும் அடையாளங்களையும் வெளியிடாமல் பல ஊடகங்கள் மறைத்துவிட்டன. வானிலை அலுவலகம் ரெட் அலர்ட் விட்ட பிறகும் அந்த நிறுவனம் தொழிலாளர்களை கட்டாய மான முறையில் வேலைக்கு வர வைத்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிகழ்வுகளில் இருந்து ஸ்பெயின் வெள்ளத்தால் ஏற்பட்ட மரணத்திற்கு பின்னால் உள்ள முதலாளித்துவ சுரண்டலையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஸ்பெயின் வெள்ளம் முதலாளிகள், நவ தாராளமய கொள்கை, அதனால் உருவாகும் உழைப்பு சுரண்டல், தீவிர வலதுசாரி கொள்கை கள் ஆகியவை காலநிலை தொடர்பான பேரழிவு டன் இணைந்து 200க்கும் மேற்பட்ட அப்பாவி களை படுகொலை செய்துள்ளது என்றே கூறலாம். -சேது சிவன்