states

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்

சென்னை, ஜூலை 6 - ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவை நடத்த லாம், ஆனால் ஏற்கனவே முடிவு செய்யப் பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானத்தின் மீதும் முடிவு எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டனர். மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வரும் 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நீதிபதி கள் உத்தரவில், ‘கட்சி விவகாரங்களில் நீதி மன்றம் தலையிட முடியாது. அதிமுக பொதுக் குழு நடத்த தடை விதிக்க முடியாது. பொதுக்  குழுவை நடத்த நீதிமன்றம் வழி காட்ட முடி யாது. அதிமுக கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது ஏன்? ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம். ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகளின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.இவ்வழக்கில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ் தரப்பு முறையிடலாம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவ மதிப்பு வழக்கிற்கும் தடை விதிக்கிறோம். பிரச்சனைகளை பொதுக்குழுவில் பேசிக்கொள்ளுங்கள். அதிமுக பொதுக் குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும்” என்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.