states

கொரோனா கால வழக்குகள் ரத்து

சென்னை, மே 15- கொரோனா ஊரடங்கு காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி  பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்க ளுக்காக பதிவு  செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு  செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொது மக்களின் நலன் கருதி கைவிடப்படுகிறது என்று தமிழக காவல்துறையினருக்கு டிஜிபி  எழுதியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள் ளது.