states

தமிழக தேர்வர்களுக்கு வாசலை அடைக்கலாமா?

மதுரை, நவ.25- தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட பருவத் தேர்வு கள் நடைபெறுவதால், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளின் தேதிகளை மாற்றக் கோரி ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் இந்திய வானியல் துறைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய தேர்வாணையம் 31.10.2022 அன்று வெளி யிட்ட அறிவிக்கையின்படி, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகள் (அடுக்கு 1) (Combined Graduate level Examinations (Tier 1)) டிசம்பர் 1 முதல் 13, 2022 க்குள்ளாகவும், ஐஎம்டி தேர்வுகளில் அறிவியல் உதவியாளர் (Scientific Assistant in IMD Examin ations) பதவிக்கு டிசம்பர் 14 முதல் 16, 2022 க்குள்ளா கவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட  பருவத் தேர்வுகள் இருப்பதால் இந்த பணி நியமன தேர்வுகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும்.  கடந்த காலங்களில் ஒன்றிய அரசுத் துறை/ நிறு வனங்களின் பணி நியமனங்களில் உரிய பங்கு தமிழ கத்திற்கு கிடைக்கவில்லை என்ற நிலைமைகள் இருந்துள்ளன.  2011-இல் Scientific Assistant in IMD Examin ations வெற்றி பெற்ற 465 பேரில் 3 பேர், 2017-இல் வெற்றி  பெற்ற 1165 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர் என்ற தகவல்கள்  தரப்படுகின்றன. 2022-இல் வாசலே இழுத்து மூடப்படு வது போல தேதிகள் உள்ளன. எனவே, தேர்வு தேதி களை மாற்ற வேண்டும்.  இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.