states

img

தனிச் சட்டம் இயற்றி நடராஜர் கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருக!

 கடலூர்,ஜூன்.11- தனிச் சட்டம் இயற்றி சிதம்ப ரம்  நடராஜர் கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கடலூரில் சனிக்கிழமையன்று (ஜூன் 11) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:  சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சி தர்கள் நடவடிக்கை பெரும் பிரச்சினை யாக மாறி உள்ளது. கோயில் வரவு- செலவு சம்பந்தமாக பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்ததையடுத்து. தமிழக அரசு ஆய்வு செய்ய  குழு  அமைத்து நான்கு முறைக்கு மேல்  நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு  அனுப்பப்பட்ட பதிலின் அடிப்படை யில் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும்  போது, ஆவ ணங்களை காட்ட மாட்டோம் என்று தீட்சிதர்கள் கூறியுள்ள னர். இந்த கோயில் எங்களுக்கு பாத்தியமான கோயில் என்று தீட்சிதர் கள் கூறுவது உண்மைக்கு விரோதமா னது. 

பல்வேறு தீர்ப்புகளில் இந்த கோயில்  பொது கோயிலாக தான் கூறப்பட் டுள்ளது.  தமிழக அரசு நிதானமாக இந்தப் பிரச்சனை கையாளுகின்றது. நடவடிக்கையை  துவங்கிவிட்டபின்னர் பாதியில் விட்டுச் செல்லக்கூடாது.  தனிவாரிய சொத்தாகவே இருந்தா லும் அதை சட்டத்துக்கு உட்பட்டு பராமரிக்க வேண்டும் என்று சட்டம்  சொல்கிறது.  வாரணாசியில் உ.பி அரசு  தனிச் சட்டம் நிறைவேற்றி காசி விஸ்வ நாதர் ஆலயத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.  அதேபோல் இமாச்சல பிரதேச அரசு 12 கோயில் களுக்கு தனிச் சட்டம் இயற்றி அரசின்  கட்டுப்பாடுக்குள்  கொண்டு வந்துள்ளது.  அதே போல் தமிழக அரசும் தனிச் சட்டம் இயற்றி நடராஜர் கோயிலையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள், சிற்பங்கள், பாதுகாக்கப்படும். மோசமான 8 ஆண்டுகள் ஒன்றிய அரசு 8 ஆண்டுகளை நிறைவு  செய்துள்ளதாக  தொலைக்காட்சியில் பிரதமர் மோடி  பேசி வருகிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்தி காந்ததாஸ்  கூறும்போது விலைவாசி உயர்ந் துள்ளது.  இலங்கையில் தற்போதுள்ள நிலை தான் இந்தியாவில் உள்ளது என்று கூறியுள்ளார்.  எட்டு ஆண்டு களில் மோடி அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தவில்லை.  லட்சக்கணக்கான மக்கள் வேலை யிழந்துள்ளனர்.  புதிதாக வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை.

வெறுப்பு அரசியல் 

பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி அவர்  பேசுவதற்கு பாஜகவும் அதன் துணை அமைப்புகளும்  உரு வாக்கிய வெறுப்பு அரசியல் தான் காரணம். மதவெறி அரசியலை தீவிரப் படுத்தியது மட்டும் தான் எட்டு ஆண்டு களில் மோடி ஆட்சியின் சாதனை. தமிழகத்தில் அண்ணாமலை நினைத்ததை எல்லாம் பேசி வருகிறார். மாநில அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். டீசல் விலையை 16 முறை உயர்த்தும்போது ஏன் ஒரு முறை  கூட எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய வில்லை. முழு விலை உயர்வுக்கு காரண மாக இருந்துவிட்டு இன்று விலையை குறைக்கவில்லை என்று கூறுவது சரியல்ல.

எத்தனை பேருக்கு வேலை?

என்எல்சி நிறுவனம்  நவரத்னா நிறுவனங்களில் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் 1952 ஆவது ஆண்டி லிருந்து இந்த நிறுவனத்திற்கு  நிலம்  கொடுத்தவர்களுக்கு எந்தவித நியாயமும் செய்யவில்லை. நிரந்தர  வேலை கேட்டும் முடியாது காண்ட்ராக்ட்  வேலை தருகிறோம் என்று கூறினார் கள். அப்படி பார்த்தாலும் இன்று வரை எவ்வளவு பேருக்கு சொசைட்டியில் வேலை கொடுத்திருக்கிறார்கள்.  மொத்த நிறுவனத்தையும்  ஒப்பந்த நிறுவனமாக மாற்றிவிட்டனர்.

நியாயமற்றது

நிரந்தர  தொழிலாளர்கள் எண்ணிகை அளவில் குறைந்து வருகின்றனர். தற்போது மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு 12,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர். இரண்டு சுரங்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு எந்தவகையான இழப்பீடு வழங்காததால் மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்து வது நியாயமற்றது. விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்கி றார்கள். அந்த அளவிற்கு நிலக்கரி உள்ளது. கோரிக்கையை நிறைவேற்றி, நிரந்தர வேலை வழங்கி, மறுவாழ்வு, மறுகுடியமர்வு நிறைவேற்றிய பின்னர் நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்க வேண்டும். நிவாரணத்தை உயர்த்தி தருக கடலூர் அருகே குச்சி பாளை யத்தில் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த  7 பெண்களின் குடும்பங்க ளுக்கு முதலமைச்சர் உடனடியாக ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளார்.  அதை வரவேற்கும் அதே நேரத்தில் இந்த இழப்பீடு போதுமானதாக இல்லை உயர்த்தி வழங்குவதோடு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள்  மிகுந்த சேதம டைந்துள்ளன.  இனி தொகுப்பு வீடுகள்  கட்டும் போதும், அரசு திட்டங்களில் வீடு கட்டும் போதும் கழிவறை, குளிய லறை உள்ள வீடுகளாக கட்டித்தர வேண்டும்.   இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.