states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழக (SETC) பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணி களுக்கு 6-வது பயணம் முதல் 50% கட்டணம் மட்டும் செலுத்தி பய ணிக்கலாம் என்ற புதிய சலுகையை சட்டப்பேர வையில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப் பில் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகா ணத்தின் பொருளாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் முகி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய மாநிலங் களில் பொருளாளராக இந்திய வம்சாவளி நபர்  நியமிக்கப்படுவது இது வே முதல்முறையாகும்.

ஆவின் தயிர் பாக்கெட்டு களில் “தஹி” என இந்தி யில் அச்சிடப்படாது. ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப் பாடு ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள் ளார்.

நீதிபதிகள் தேர்வில் பார்வைக் குறைபாடு, பெருமூளை வாதம் உள்ள விண்ணப்பதாரர்களு க்கு மாற்றுத்திறனாளி களுக்கான இடஒதுக்கீடு செல்லுபடியாகாது என மேற்கு வங்க அரசுப் பணி யாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பிரேசில் நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 7 லட்சத் தை கடந்துள்ளது. அமெ ரிக்காவிற்கு அடுத்தபடி யாக அதிக கொரோனா இறப்பு எண்ணிக்கையை கொண்ட  நாடாக பிரே சில் உள்ளது. அமெரிக்கா வில் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோ னாவால் இறந்துள்ளனர். கொரோனா இறப்பு எண் ணிக்கையில் இந்தியா 5.30 லட்சம் உயிரிழப்பு களுடன் 3வது இடத்தில் உள்ளது.

நாட்டில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை வைத்திருந்த 2 நைஜீரிய வாலிபர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

2023-ஆம் ஆண்டின் ஆசியாவின் 50 சிறந்த உணவகங்களின் பட்டி யலை பிரபல ஆய்வு நிறு வனமான “ஆசியா பெஸ்ட் 50” வெளியிட் டது. இந்த பட்டியலில் தாய்லாந்தின் “லி டூ” உணவகம் முதலிடத்தை பிடித்தது. ஜப்பானின் செசான், தாய்லாந்தின் நுசாரா, ஜப்பானின் டென், தாய்லாந்தின் கக்கன் ஆனந்த் ஆகிய உணவகங்கள் முதல் 5 இடங்களை பிடித்த நிலையில், இந்தப் பட்டி யலில் 2 இந்திய உண வகங்களும் இடம்பிடித்து ள்ளன. தில்லியின் “இந்தியன் ஆக்சென்ட்” 19-வது இடத்தையும், சென்னையின் “அவர் தானா” 30வது இடத்தை யும் பிடித்துள்ளன. 

செயற்கை நுண்ணறி வால் (AI) வரும் காலங் களில் 300 மில்லியன் ஊழியர்களின் வேலை கள் (30 கோடி) பாதிக்கப் படலாம் என “கோல்ட் மேன் சாக்ஸ்” கூறியுள்ளது.

உலகச் செய்திகள்

தூதரக உறவுகளை முறித்துக் கொண்டு விட்டதால், தலைநகர் டெகுசிகல்பாவில் உள்ள தூதரகத்தை மூடி விடுமாறு தைவானிடம் ஹோண்டுராஸ் தெரிவித்துள்ளது. இதற்கு ஒருமாத கால அவகாசமும் கொடுத்திருக்கிறார்கள். மூடுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்ற உறுதியையும் தந்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக ஹோண்டுராசின் வெளியுறவுத்துறை துணையமைச்சர் அன்டோனியோ கார்சியா கடிதம் எழுதியிருக்கிறார்.

பிரான்சின் எரிபொருள் நிறுவனமான டோட்டல்எனர்ஜிஸ், கோன்ஃப்ரிவில்லே நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பணியை நிறுத்தியிருக்கிறது. ஜனாதிபதி இம்மானு வேல் மக்ரோனின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தொடர் வேலை நிறுத்தம் காரணமாக இந்த சுத்திகரிப்பு ஆலையும் பாதிக்கப் பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் பீப்பாய்கள் எண்ணெய் விநியோகத்தை இந்த ஆலை செய்து வந்தது.

சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவை புதுப்பித்ததற்கு சீனாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் குறிப்பிட்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடுகையில் இதைத் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவும், ஈரானும் தங்கள் தூதரக உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளப் போவதாக கடந்த வாரத்தில் அறிவித்தன.