states

img

இரத்த தான முகாம்

அறந்தாங்கி, பிப்.22-  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டுநலப் பணி திட்டம் மற்றும் பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதாரம் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம் நடைபெற்றது.  கல்லூரி நிதியாளர் கண்ணன் முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி நாட்டுநலப் பணிதிட்ட அலுவலர் முனைவர்.ச.ரமேஷ். வரவேற்றார். அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் ராதாகிருஷ்ணன், பொன்பேத்தி மருத்துவ அலுவலர் ஜகசிற்பியன், பொன்பேத்தி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள். கல்லூரி பேராசிரியர்களிடம் 60, யூனிட் இரத்தம் பெற்று அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு அளித்தனர்.