states

சீர்காழியில் ஆளுநருக்கு கருப்புக்கொடி

மயிலாடுதுறை,  மே 23-  சீர்காழியிலுள்ள  சட்டநாதர்  கோவில்  கும்பாபிஷேக விழா புதனன்று (இன்று)  நடைபெறுகிறது. இதையொட்டி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வ தற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வா யன்று சீர்காழிக்கு வந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறி வழகன், மாவட்டத் துணைச் செயலா ளர் குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை நகர் செய லாளர் விஜய், ஒன்றியச் செயலாளர் ரவிச்  சந்திரன், சீர்காழி ஒன்றியச் செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றியச் செய லாளர் கேசவன் ஆகியோர் கருப்புக் கொடி காட்டி முழக்கமிட்டனர். அவர் களைக் காவல்துறையினர் கைது செய்த னர்.   போராட்டத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த் உள்ளிட்டோரை காவல்துறையினர் வழி மறித்து கைது செய்தனர். அவர்களது இருசக்கர வாக னங்களைப் பறிமுதல் செய்து வாக னத்தில் ஏற்றிச் சென்றனர்.