states

மக்களிடம் பிரசுரங்களை கொடுக்கவிடாமல் தகராறு பாஜக மதுரை மாவட்ட நிர்வாகி அராஜகம்

மதுரை, மே 14 - மக்களிடம் பிரசுரங்க ளை கொடுத்து,பிரச்சாரம் செய்யவிடாமல் ,சிபிஎம் மற்றும் திமுகவினரிடம் வம்பிழுத்து தகராறு செய்த பாரதிய ஜனதா கட்சியின்  மதுரை மாவட்ட நிர்வாகியின் அராஜகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வெளி யிடப்பட்ட அரசியல் பிரச்சார  பிரசுரத்தை மக்கள் மத்தியில்  விநியோகிக்கும் பணியினை  தமிழ்நாடு முழுவதும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை  மாநகரில் பிரசுர விநியோகம் அனைத்து வார்டுகளிலும்  நடப்பதைப் போல, 55-ஆவது வார்டு மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்  திப்பில் கட்சியின் கிளைச்  செயலாளர் பி.சிங்காரம் தலைமையில் மக்களிடம்  விநியோகம் செய்யப்பட் டது. அப்போது, பாஜக மாவட்ட  துணை அமைப்பாளர் குமார் என்பவர் பிரசுரம் விநியோ கம் செய்வதை தடுத்து, பிர சுரத்தை பிடுங்கி கிழித்தெ றிந்தார்.மேலும் தகாத வார்த்தைகளால் பேசி வம்பி ழுத்து தகராறு செய்து கை கலப்பில் ஈடுபட்டு தேவை யற்ற பிரச்சனையை உரு வாக்கியுள்ளார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் இரா.லெனின் மற்றும் திமுக 55-ஆவது வட்ட நிர்வாகிகள், பாஜக மாவட்ட துணை அமைப்பாளரின் இச்செயல் சரியற்றது என எடுத்துச் சொல்லி, ஜனநாயக நாட் டில் அவரவர் கட்சியின் கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது.

உங்கள் கட்சியின் கருத்தை நீங்கள் பிரசுரமாக விநியோகம் செய்யுங்கள் என பொறுமை யாக திமுக மற்றும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் எடுத்துக் கூறி யும் அதை ஏற்காமல் அராஜ கமாக ‘எங்கள் தலைவர்  அண்ணாமலை திமுக அர சையும், கம்யூனிஸ்ட்டுகளை யும் சும்மாவிடமாட்டார்’ என்று கோபத்தை ஏற்படுத் தும் வகையில் பேசி, ‘இப்  போது பாருங்கள் .நான் எங்  கள் ஆட்களை வரவைக்கி றேன். உங்களை என்ன பண்றேன் பாருங்கடா’ என்று கூறி மிகவும் தகாத  வார்த்தைகளால் பேசி  ஆட்களை வரவைத்துள் ளார். பிறகு அங்கு வந்த  காவல்துறையினர் வம்பி ழுத்த குமார் என்பவரை அழைத்துச் சென்றுள்ளனர்.  மேற்படி குமார் .மதுரை விமான நிலையத்தில் தமி ழக அமைச்சர் ஒருவர் கார்  முன் மறியல் செய்து அத்து மீறலில் ஈடுபட்ட நபரில் ஒரு வர் என்பதும் இவர் மீது வழக்குகள் உள்ளன என்ப தும் தெரிய வருகிறது. விசா ரிக்கின்ற காவல்துறை யினரை மிரட்டும் போக்கும்  உள்ளது. பிரச்சனையை உருவாக்கி பொய் வழக்கிற்கு முற்படுகிற நப ராகவும் உள்ளார். மதுரையில் தொடர்ந்து பாஜகவினர் மாற்று அரசி யல் கட்சியினரின் பிரச்சா ரங்களை சகித்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண் டிக்கிறது. இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.