விருதுநகர், செப்.3- விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லி புத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலத்தை பயன்படுத்தி மதக் கலவரம் மற்றும் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்பு கள் முயற்சி செய்து வருகின்றன. எனவே, இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியதாவது : விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்க ளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில நாட்க ளுக்குப் பின் சிலைகளை மொத்தமாக ஒரே இடத்திற்கு வரவழைத்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாவட்ட நிர்வா கத்தால் நிச்சயிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. அவ்வாறு ஊர்வல மாகச் செல்லும் போது, பிற மதத்தினரின் வழி பாட்டுத் தலங்கள் உள்ள பகுதி வழியா கத்தான் செல்வோம் எனவும், மேலும் மேள தாளங்களுடன்தான் செல்வோம் எனவும் இந்து முன்னணியினர் தொடர்ந்து பிரச்சனை செய்து வருகின்றனர். இதன் மூலம் அப்பகு தியில் மதக் கலவரம் மற்றும் சமூகப் பதற் றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.