states

‘மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு’ பேரவையில் சிரிப்பலை!

சென்னை, மே 6- கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பி னர் செல்லூர் ராஜூ, “20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ள மதுரையில் எந்த பொழுது போக்கு வசதியும் இல்லை. பொழுது போக்க இடமே இல்லை. எனவே, மதுரை  வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக் குளத்தை சுற்றுலமாக அறிவிக்க அரசு முன்வருமா? என்றார் அப்போது குறுக்கிட்ட பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டிற்கே  தெரிந்த விசயம்”என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. மதுரை தெப்பக் குளத்தில் ஏற்கெனவே படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. மேலும், மாஸ்டர் பிளான் திட்டத்தின்  கீழ் 300 இடங்களில் சுற்றுலா மையங்கள் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் 13 இடங்கள் தேர்வு  செய்யப்பட்டிருக்கிறது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.