“தலித் உரிமைகளும் சவால்களும்” என்ற தலைப்பில் தலித் உரிமைகள் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டமும், கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் நீதி நிலைபெற அரும்பாடுபட்ட வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு பாராட்டு விழாவும் சென்னை வியாசர்பாடி முல்லை நகரில் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், சிபிஐ மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, டி.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.