states

img

தீக்கதிர் உலக செய்திகள்

நீதிபதிகள் மேற்கொள்ள இருந்த  பயிற்சியை ரத்து செய்தது வங்கதேசம்

வங்கதேச நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் மேற்கொள்ள இருந்த பயிற்சியை அந்நாட்டு அரசு ரத்து செய்துவிட்டது. ஷேக் ஹசீனா வங்க பிரதமராக இருந்தபோது, அந்நாட்டின் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஒப்பந்தத்தின் படி  பிப்ரவரி 10 அன்று பயிற்சி துவங்க இருந்த நிலையில்  ஜன.5 அன்று அந்த பயிற்சிக்கான ஒப்பந்தத்தை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்து  அறிவிப்பை வெளியிட்டது.

ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும்  அமெரிக்க அரசு 

இஸ்ரேலுக்கு சுமார் 8 மில்லியன் அளவு மதிப்பு கொண்ட ஆயுதங்களை கொடுப்ப தற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் உத்தர விட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொ னால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று  பொறுப் பேற்கும் முன் உக்ரைன் மற்றும் இஸ்ரே லுக்கு அதிகளவிலான ஆயுதங்களை கொடுக்க பைடன் முடிவு செய்துள்ளார். இதன் அடிப்ப டையில் தான் கடந்த மாதம் அமெரிக்காவின் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை  பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்திருந்தது.

ஊட்டச்சத்து குறைபாட்டை களைய  இந்தோனேசியா இலவச உணவு திட்டம்

இந்தோனேசிய மக்களை எதிர்கொள்ளும் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவ தற்காக  பிரபோவோ சுபியாண்டோ அரசு  இலவச உணவு திட்டத்தை அறிவித்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட 21.5 சதவீத இந்தோனேசியக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது குழந்தைகள், பெண்கள் என சுமார் 9 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக  28 மில்லியன் டாலர்  மதிப்பிலான திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு உலக வங்கி  கடன் கொடுக்க திட்டம்

பாகிஸ்தான் அரசுக்கு சுமார் 1.70 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்கள்) கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுத்து   நவதாராளமயக் கொள்கைகளை அமல்படுத்த கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து நாட்டின் அரசியல் சூழல் நிலையற்ற தன்மைக்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் உலகவங்கி மீண்டும் கடன் கொடுக்க முன்வந்துள்ளது.

மேற்கு நாடுகள் அமைதிக்கு  ஆர்வம் காட்டுவதில்லை

மேற்கத்திய நாடுகள் அமைதிக்கு  ஆர்வம்காட்டு வதில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். பிற நாடுகள் மீது தன் செல்வாக்கை செலுத்தி  அவற்றின் வளங்களின் மிகப்பெரிய பங்கை கைப்பற்ற ஆர்வம் காட்டுவது போல சிரியாவின் ஒற்றுமையில் மேற்கத்திய நாடுகள் அக்கறையை காட்டவில்லை. ரஷ்யாவுடன் இணக் கத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என சிரியாவின் தற்போதைய தலைவரான அஹ்மத் அல்-ஷாரா மேற்கு நாடுகளின்  அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் விமர்சித்துள்ளார்.