சென்னை, அக்.20- சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய பிஎஸ் -6 சாதா ரண பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ள தாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்ச ரின் உத்தரவின்படி, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2022-23 மற்றும் 2023-24 ஆம் வரு டத்திற்கான அறிவிப்பின் படி 2,000 புதிய பஸ்களில் இதுவரை 1,905 புதிய பேருந்துகள் பயன் பாட்டிற்கு வந்துள்ளன. அதேபோல் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,500 பேருந்துகளில் கூண்டு முழுவதும் புதுப்பிக்க ஆணை வழங்கப்பட்டு, அதில் 1,262 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு பயன் பாட்டிற்கு வந்துள்ளன. மேலும், மாநகர் போக்கு வரத்துக் கழகத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கிநிதி உதவி யுடன் ஏற்கனவே மாற்றுத்திற னாளிகள் மற்றும் முதி யோர்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பேருந்துகளுடன், கூடுத லாக 41 புதிய தாழ்தள பேருந்துகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 2024-25 ஆம் வருடத் திற்கான அறிவிப்பின்படி 3,000 புதிய பஸ்களை கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலை யில், அக்டோபர் 20 முதல் மாநகர் போக்குவரத்துக் கழ கத்தில் 80 புதிய சாதாரண பிஎஸ்- 6 பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள், “விடியல் பயணத் திட்டத்தில்” இயக்கப்படுவ தால் மகளிர், மாற்றுத்திற னாளிகள் மற்றும் திருநங்கை கள் உள்ளிட்டோர்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.