states

நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

“1843ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட “சுலோசன முதலியார் பாலம்” திறக்கப்பட்டு திங்களன்று 179 ஆவது ஆண்டை கொண்டாடுகிறது. அந்த வகையில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானப் பணிகள் உறுதித் தன்மையுடனும், தரத்துடனும் இருக்க வேண்டும்” என இந்தகூட்டத்தில் அமைச்சர் வேலு  வலியுறுத்தினார்.

சென்னை,நவ.28 நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டு மானப் பணிகள், நில எடுப்பு, விரி வான திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமை ச்சர் எ.வ.வேலு சென்னையில் திங்க ளன்று (நவ.28) ஆய்வு மேற்கொண் டார்.  இதில் பேசிய அவர்,  ஒரு சாலை யை முழுமையான மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் பொழுது உரிய திட்டமிடுதல் வேண்டும். திட்டமிடுதலில் புதுப் புது உக்திகள் கடைப்பிடித்து இலக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும். உரிய காலக்கெடுவுக்குள் பணி களை முடிப்பதற்கு தேவை யான ஒருங்கிணைப்பு பணிகள், சாலை பகுதிகளில் அமைக்கப்பட் டிருக்கும் குடிநீர் குழாய்கள், மின் சார வாரிய உபகரணங்கள் மாற்றி யமைத்தல் மற்றும் மரங்களை அகற்றுதல் ஆகியவற்றை உரிய திட்டமிடுதலுடன் மேற்கொண்டு பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைய அனைத்து வித முயற் சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.  பெரிய பாலப்பணிகள் நவீன உக்திகளை கடைப்பிடித்து கட்டு மானம் மேற்கொண்டால் குறுகிய காலத்தில் பணிகளை முடிக்க சாத்தியமாகும். ரயில்வே மேம் பாலப் பணிகளில், ரயில்வே துறை யுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். விதி முறைகளின்படி முறையான தரக்க ட்டுப்பாடு சோதனைகள் மேற் கொள்ள வேண்டும்.  பணிகளை செயல்படுத்தும்போது, குறிப்பாக சாலையை அகலப்படுத்தும் பணிகள், சாலை மேம்பாடு, பாலங்கள் கட்டும் பணிகளில் உரிய பணியிட பாதுகாப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். திட்டப்பணிகள் உடனடியாக திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டால்தான், அடுத்த டுத்த திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என ஆலோசனை வழங்கினார்.