சென்னை,ஏப்.17- மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழி யில் சட்டப்பேரவை நடவடிக் கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க. ஸ்டா லின் திங்களன்று(ஏப்.17) தலைமைச் செயலகம், தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகத்தின் சார்பில் செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்ட மன்றப் பேரவை நடவடிக் கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ் வினை சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு முன்னி லையில் தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளி களுக்கான உரிமைகள் சட்டம் 2016-இல் வலியுறுத்தி யுள்ளவாறு,
மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்ற சூழலை ஏற்படுத்தும் நட வடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற் கொண்டு வருகிறது. செவித் திறன் மாற்றுத்திறனாளி களின் தகவல் பரிமாற்றத் திற்காக, மாவட்ட ஆட்சியர் களால் நடத்தப்படும் கூட்டங் கள் உட்பட அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சைகை மொழி பெயர்ப்பாளர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது நடைபெறும் 2023-24 ஆம் ஆண்டு சட்ட மன்ற கூட்டத்தொடர் நிகழ்ச் சிகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளும் தெளிவாக அறிந்து கொள் ளும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்க காணொளி தயாரித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக ஊடகங்க ளில் ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்க முதல் வர் ஆணையிட்டார். இதன்படி, செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் அறிந்துகொள்ளும் வகை யில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு, யூடியூப் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்திடும் வகையில், சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ் வினை சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு முன்னிலையில், முதல்வர் தொடங்கி வைத் தார். இதில் அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, பேரவை துணைத் தலைவர் கு.பிச் சாண்டி, தலைமைச் செய லாளர் வெ.இறையன்பு, பேரவைச் செயலாளர் கீ. சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.