states

ஆளுநருக்கு எதிராக பேரவையில் தீர்மானம்

சென்னை,ஜன.10- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் தனிநபர் தீர்மானம்  கொண்டு வர முடிவு செய்யப்பட் டுள்ளது. சட்டமன்ற காங்கிரஸ் தலை வர் செல்வபெருந்தகை செவ்வா யன்று(ஜன.10) தலைமைச் செய லகத்தில் பேரவைத் தலைவர் மு. அப்பாவுவை  சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் நடந்து கொண்ட செயலை கண்டித்து அவருக்கு எதிராக தனி நபர் தீர் மானத்தை காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. இந்த தனிநபர்  தீர்மானத்தை ஜன.11 அன்று பேரவைக் கூட்டத்தில் எடுக்கு மாறு கூறியுள்ளோம். பேரவைத் தலைவரும் சரி என்று சொல்லி யிருக்கிறார். இந்திய வரலாற்றில் எந்த ஒரு ஆளுநரும் இதுபோல் அநா கரீகமாக நடந்து கொண்ட தில்லை. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத் தோடு வளர்ந்தவர் என்பதால் இந்திய அளவில் பிரதமர் மோடி என்ன செய்கிறாரோ, அதையே தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி செய்ய ஆரம்பித்துள்ளார். தேசிய  கீதத்தை மதிக்காமல் வெளியேறி யது வரலாற்றில் ஒரு கரும்புள்ளி யாகும். காவல்துறையாக இருந்த ரவி, எப்படி செயல்பட்டிருப்பார்? மக்களுக்கு எந்த அளவுக்கு பாது காப்பு கொடுத்திருப்பார்? என்பது அவரது இன்றைய நடவடிக்கைகள் அடையாளம் காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப் புக்கு பிரச்சார பீரங்கியாக செயல்படும் ஆளுநர் ரவியை தமிழ்நாட்டு மக்கள் புறம் தள்ள வேண்டும். வழக்கமாக ஆளுநர் மாளிகையில் பொங்கல் வாழ்த்து அச்சிடும் போது தமிழ்நாடு ஆளு நர் என அச்சிடுவார்கள். ஆனால்  இவர் இந்த ஆண்டு தமிழக ஆளு நர் என்று அச்சிட்டு அழைப்பு  அனுப்பியுள்ளார். இது பாஜக வின் செயலை வெளிப்படுத்துவது போல் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்தை தூக்கி பிடிப்பதாக உள்ளது.   இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.