states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பல் பிடுங்கிய ஏஎஸ்பி: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை, ஏப்.19- திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்தி ரத்தில் காவல் நிலையத்திற்கு விசார ணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்  களை பிடுங்கியதாக  போலீஸ் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது புகார் எழுந்தது இதைத் தொடர்ந்து பல்வீர்சிங் சஸ் பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்த விவ காரத்தில்  அவர் மீது வழக்கும் பதிவு செய்  யப்பட்டது. இது குறித்து விசாரிக்கத் தமிழ்  நாடு அரசு விசாரணை அதிகாரியாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அமுதாவை நியமித்தது. இதையடுத்து உட னடியாக அம்பாசமுத்திரம் சென்ற அமுதா, விசாரணை நடத்தினார். இதன் முடிவில் இது குறித்த விசாரணை குற்றப்பிரிவு குற்றப்புல னாய்வுத்துறையால் (சிபிசிஐடி) நடத்தப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் இதுதொடர்புடைய அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி விசார ணைக்கு மாற்றி காவல்துறை தலைமை  இயக்குநர் சைலேந்திரபாபு உத்தர விட்டுள்ளார்.

அரசு தரிசு நிலம் எவ்வாறு தனி நபர் நிலமாக மாறியது

உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி-அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, ஏப்.19-  மதுரையைச் சேர்ந்த கோசலை என்பவ ருக்கு  அரசால் தரிசு நிலம் என  ஒதுக்கீடு  செய்யப்பட்ட  நிலத்திற்கான  உத்தரவு ரத்து  செய்யப்பட்டது.இதற்காக மாவட்ட ஆட்சியர்  பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி புகழேந்தி முன்பு புதனன்று நடை பெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில்,  “ உசி லம்பட்டி தாலுகா நல்லதேவன்பட்டி கிரா மத்தில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட இடம்  தரிசு நிலம் என 2006 ஆம் ஆண்டு அரசின்  ஆவணத்தில் வகைப்படுத்தப்பட்டு உள் ளது.  இந்நிலையில் மனுதாரருக்கு நிலத்தை  ஒதுக்கிய பின்பு, 2008 இல் கணேசன் என்பவர்  அந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும்,  மாயக்காள் என்பவரிடமிருந்து தான் அந்த நிலத்தை வாங்கியதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில், மனுதாரருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உத்தரவு மாவட்ட ஆட்சியரால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுகிறது.  ஆகவே மதுரை மாவட்ட வருவாய் அலு வலர் உசிலம்பட்டி தாலுகா நல்லதேவன் பட்டி கிராமத்தில் சம்பந்தப்பட்ட இடம் யாரு டைய கட்டுப்பாட்டில் இருந்தது?  அரசு தரிசு நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலம்  எவ்வாறு  கணேசன் என்பவரால் வாங்கப் பட்டுள்ளது? என்பது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து ஏப்ரல் 25ஆம் தேதி அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டார்.

மாநில அரசு கரும்புக்கு  கூடுதல் விலை அறிவித்திடுக! 

கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை,ஏப்.19- மாநில அரசு கரும்புக்கு கூடுதல் விலை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநி லக்குழு கூட்டம் பெரம்பலூரில் மாநிலத் தலைவர் வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொ துச்செயலாளர் டி.ரவீந்திரன் , மாநிலப் பொருளாளர் சி.பெருமாள் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 9.5 சர்க்கரை பிழிதிறனுக்கு  ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய அரசு ரூ.5 ஆயிரம் விலை வழங்கிட வேண்டும்.  மாநில அரசு வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்துவிட்டு கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவித்து வழங்க வேண்டும்.  தமிழ்நாட்டில் கூ‌ட்டுறவு சர்க்கரை ஆலைகளை புதுப் பித்து நவீனப்படுத்திட ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். அலங்காநல்லூர் நேசனல்,  என்பிகேஆர்   கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்த வேண்டும். திருத்தணி,கள்ளக்குறிச்சி,  மதுராந்தகம் உள்ளிட்ட கூ‌ட்டுறவு ஆலைகளை புதுப்பித்து புனரமைக்க மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். 140 நாட்களாக திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் போராடி வருகி றார்கள், முதலமைச்சர் தலையீடு செய்து அமைச்சர் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.சென்னை,ஏப்.19- மாநில அரசு கரும்புக்கு கூடுதல் விலை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநி லக்குழு கூட்டம் பெரம்பலூரில் மாநிலத் தலைவர் வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொ துச்செயலாளர் டி.ரவீந்திரன் , மாநிலப் பொருளாளர் சி.பெருமாள் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 9.5 சர்க்கரை பிழிதிறனுக்கு  ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய அரசு ரூ.5 ஆயிரம் விலை வழங்கிட வேண்டும்.  மாநில அரசு வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்துவிட்டு கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவித்து வழங்க வேண்டும்.  தமிழ்நாட்டில் கூ‌ட்டுறவு சர்க்கரை ஆலைகளை புதுப் பித்து நவீனப்படுத்திட ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். அலங்காநல்லூர் நேசனல்,  என்பிகேஆர்   கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்த வேண்டும். திருத்தணி,கள்ளக்குறிச்சி,  மதுராந்தகம் உள்ளிட்ட கூ‌ட்டுறவு ஆலைகளை புதுப்பித்து புனரமைக்க மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். 140 நாட்களாக திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் போராடி வருகி றார்கள், முதலமைச்சர் தலையீடு செய்து அமைச்சர் சட்ட மன்றத்தில் அறிவித்தபடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த  24 மணி நேரத்திற்குள்  நிறுவன பதிவு சான்று வழங்க  மசோதா 

சென்னை,ஏப்.19- தமிழ்நாட்டில் 10 அல்லது அதற்கு  மேற்பட்ட வேலை ஆட்கள் பணிபுரி கின்ற நிறுவனம் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் உரிமையாள ருக்கு பதிவு சான்றிதழ் வழங்குவது தொடர்பான தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் புதனன்று (ஏப்.19) தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டி ருப்பது வருமாறு:- வணிகம் தொடங்கப்பட்ட தேதியி லிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவுக்காக விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெற வேண்டும். விண்ணப் பித்த நபருக்கு 24 மணி நேரத்துக்குள் பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும். பதிவு சான்றிதழ் ஆனது நிறு வனத்தின் முக்கியமான இடத்தில்  காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் அளிக்கப் பட்டுள்ள விவரங்கள் மாற்றம் செய்திருந்தால் 30 நாட்களுக்குள் தொழில்துறை ஆய்வாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். திருத்தம் செய்யப்பட்டதற்கான புதிய பதிவுச் சான்றிதழை பெற வேண்டும். 1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு  கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் வேலை நேரம், வார ஓய்வு, விடுமுறைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய வேலை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிக்கலான  குடல் மாற்று  அறுவை சிகிச்சை

சென்னை,ஏப்.19- 46 வயதான, குடும்ப தலைவி சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார்.   கேரளாவில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக சென்றபோது, சிறு குடல் முழுமையாகவும் பெருங்குடல்  பகுதியளவும் அழுகும் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. கேரளா வில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும்  குறுகிய சிறுகுடல் காரண மாக தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு  போதுமான அளவு நீர், வைட்ட மின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக் களை உணவிலிருந்து கிரகிக்க  இயலாத நிலை அவருக்கு ஏற்பட்டது.  இதனால் மோசமான உடல் நிலையை பாதுகாக்க அவர் சென்னை அழைத்துவரப்பட்டு சூளைமேடு எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு  சிறுகுடல் உறுப்புமாற்று சிகிச்சையை மேற்கொள்வது என்று டாக்டர். அனில் வைத்யா மற்றும் அவரது குழுவினர் முடிவுசெய்தனர். பெங்களூருவில்தானமாக பெற்ற சிறுகுடல்   விமானத்தின் வழியாக  சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அதனைப் பயன்படுத்தி மருத்துவ அறிவியல் வளர்ச்சியால் இந்த  பெண்ணிற்கு  சிறுகுடல் உறுப்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.  அதன்பிறகு நலமு டன் இருக்கும் இப்பெண்மணி, விரைவில் அவரது வழக்கமாக  செயல்பாடுகளை மேற்கொள்ள விருக்கிறார் என மருத்துவமனையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழை மத்திய அலுவல் மொழியாக்க பாமக வேண்டுகோள்

சென்னை,ஏப்.19-  தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்ட வணையில் உள்ள 22 மொழிகளும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்று  பா.ம.க. நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஒன்றிய அரசின் பணியாளர் தேர் வாணையம் நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும், ஒருங்கி ணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதனை வரவேற்றுள்ள அவர், தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெறும் நிலை கூடாது. அன்னைத் தமிழ் மொழிக்கு அதற்குரிய அனைத்து உரிமைகளும், மரியாதையும் வழங் கப்பட வேண்டும். அதற்காக தமிழ்  உள்ளிட்ட எட்டாவது அட்டவணை யில் உள்ள 22 மொழிகளும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள் ளார்.

‘கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்க  வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம்’

சென்னை,ஏப்.19   கல்லீரலை பாதிக்கும் பிரச்ச னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி உலக கல்லீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த  நிலையில் கல்லீரலை ஆரோக்கிய மாக பராமரிப்பது குறித்து கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் கணைய நோய்கள் – அறுவை சிகிச்சை துறை  இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ் சில  ஆலோசனைகளை வழங்கி உள்ளார். மூளைக்கு அடுத்தபடியாக கல்லீரல் நமது உடலின் இரண்டாவது  பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பு ஆகும். கல்லீரலை முறை யாக பராமரிக்காவிட்டால், அது எளி தில் பாதிக்கக்கூடும் அபாயம் உள்ளது. கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது என்பது நமது ஒட்டு மொத்த நல்வாழ்வுக்கு முக்கிய மானதாகும். ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்கவும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பழங்கள், காய்கறி கள் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட நார்ச்சத்து அதிகம் உள்ள  உணவுகளை சாப்பிடும் அதே நேரத்தில், பதப்படுத்தப்பட்ட மற்றும்  கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால் கல்லீரல் ஆரோக்கி யமாக இருக்கும். வைட்டமின் சி  மற்றும் ஈ போன்ற ஆன்டி–ஆக்ஸி டன்ட்கள் நிறைந்த உணவுகளும் கல்லீரலை பாதுகாக்க உதவும் என்று  அவர் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில்  திடீர் நிலஅதிர்வு ஏன்? அமைச்சர் விளக்கம்

சென்னை,ஏப்.19- திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர், நத்தம், ஒட்டன்சத்திரம் பகுதி களில் திடீர் திடீர் என நில அதிர்வுகள்  ஏற்பட்டது குறித்து சட்டப்பேரவை யில் திமுக உறுப்பினர்கள் எஸ்.காந்திராஜன், ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன் பதிலளித்தார். அப்போது, “திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் வட்டம், வேடசந்தூர் வட்டங்க ளிலும் இதர இடங்களிலும் சமீபத்தில்  15 முறை அதிக சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை வரப்பெற்றது. சுற்றுவட்டாரப் பகுதி களில் கல்குவாரிகள் ஏதும் இல்லை என்றும் இதனால் அது வெடி சத்தம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழக காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை மைய இயக்குநர், வேலூர் தொழில் நுட்ப நிறுவன  காலநிலை மற்றும் பேரிடர் தணிப்பு மைய இயக்குநர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்றது. அந்த  குழு ஒரு அறிக்கையை கொடுத்துள் ளது. அதில், நில அதிர்வு பாதிக்கும்  நிலை 2 மற்றும் 3 வது இடத்தில்தான் திண்டுக்கல் மாவட்டம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இருந்தா லும் இறுதி அறிக்கை முழுமையாக கிடைத்த பிறகுதான் உரிய நடவடிக் கள் மேற்கொள்ளப்படும். மேலும், தேசிய பேரிடர் மேலாண்மையின் நில  நடுக்க துறை நிபுணர்கள் ஆய்வு  செய்யவும் அறிவுறுத்தப்படும்” என்றார்.

தைவான் தலையில் ஆயுதங்கள் அமெரிக்கச் சதி ஈடேறுகிறது

வாஷிங்டன், ஏப்.19- பதற்றத்தைத் தூண்டி, அதன் மூலமாகப் பிற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவின் எண்ணம் சீனப் பகுதியிலும் நிறைவேறவிருக்கிறது. தைவானைத் தூண்டி விட்டு, அவர்கள் தலையில் ஆயுதங்களைக் கட்டிவிட வேண்டும் என்ற அமெரிக்க முயற்சியால், நிலத்திலிருந்து போர்க்கப்பல்களைக் குறிவைத்து எறியப்படும் ஹார்பூன் ரக  ஏவுகணைகளை வாங்க தைவான் முடி வெடுத்திருக்கிறது, சுமார் 9 ஆயிரம் கோடி  ரூபாய் மதிப்பில் 400 ஏவுகணைகளை வாங்க தைவான் ஒப்புக் கொண்டிருப்ப தாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளி யிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. இதற்  கான உடன்பாடு ஏப்ரல் 7 ஆம் தேதியன்று கையெழுத்தாகியுள்ளது. தனது ராணுவத்தை நவீனப்படுத்தப் போவதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த  ஹார்பூன் ரக ஏவுகணை வாங்கப் போவ தாகவும் 2020 ஆம் ஆண்டில் தைவான் அறி வித்திருந்தது. இதற்கு முன்பாக, கப்பலில் இருந்து எறியக்கூடிய ஏவுகணை தைவான்  வாங்கியிருக்கிறது. நிலத்தில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று, வீசும்  வசதியுள்ள இந்தப் புதிய ஏவுகணை யைத் தனது ராணுவத்தை மேலும் நவீ னப்படுத்துவதன் ஒரு பகுதியாக தைவான் வாங்க முடிவு செய்திருக்கிறது. 2029 ஆம் ஆண்டில்தான் இந்த ஏவு கணைகளின் உற்பத்தியே நிறைவு பெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு செய்து தைவான் காத்திருக்கப் போகிறது.  இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளது. ஒரே சீனம் என்று ஒப்புக் கொண்ட  பிறகு, அதன் ஒரு பகுதியாக உள்ள தைவா னுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது  சட்டவிரோதம் என்று கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. இது சீன இறை யாண்மைக்கு எதிரான நடவடிக்கை என்றும், அமெரிக்க-சீன உறவுகளுக்குக் கடும் சேதத்தை விளைவிக்கும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.